ஜெ. படத்தை சட்டசபையில் அகற்ற கோரும் திமுக வழக்கு- உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
ஜெயலலிதா படத்தை சட்டசபையில் அகற்ற கோரும் திமுக வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திரு உருவப்படம் திறப்பு- வீடியோ
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் இருந்து அகற்ற கோரி திமுக தாக்கல் செய்துள்ள வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் நேற்று சபாநாயகர் தனபால் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

உச்சநீதிமன்றத்தால் சொத்து குவிப்பு வழக்கில் ஊழல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை. அத்துடன் சட்டசபையில் ஜெயலலிதா படத்தை அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்தது.
திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் தொடர்ந்த இந்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications