வாழ்த்த வருபவர்களுக்கு ஆளுக்கொரு 'டெபிட்' கார்டு! பாலக்காட்டில் பலே திருமணம்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டெபிட் கார்டு போல் திருமண அழைப்பிதழை அச்சடித்துள்ளார்.
சென்னை: டெபிட் கார்டில் திருமண அழைப்பிதழை அச்சடித்து புதுமையை புகுத்தியுள்ளார் ஒரு இளைஞர்.
திருமணம் என்றாலே அதில் முக்கிய இடத்தை பிடிப்பது அழைப்பிதழ்கள்தான். திருமணமானது சிறப்பாக களைகட்ட அழைப்பிதழ்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை கொண்டு உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் ஒரு இடத்தில் கூட வைக்கமுடியும்.
அந்த திருமண அழைப்பிதழில் புதுமை செய்யும் அந்த திருமணத்துக்கு எதிர்பார்ப்பு என்று வலுக்க தொடங்கும். தற்போது திருமணங்களில் பல்வேறு வகையான புதுமைகளை புகுத்தி வருகின்றன.

தாம்பூல பை
தாம்பூல பைகளில் வைக்கப்படும் தேங்காய், பழம் ஆகியவற்றுக்கு பதிலாக மரம் நடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கி வருகின்றனர். இன்னும் சிலரோ புத்தகங்களையும் தாம்பூலமாக வழங்குகின்றனர்.

புதுமையானது
அதேபோல் திருமண அழைப்பிதழ்களை பொருத்தவரை குறைந்த விலையிலிருந்து அதிக விலை வரை நம் வசதிக்கேற்ப அடித்துக் கொள்ளலாம். அதிலும் புதுமைகளை புகுத்தி வருகின்றனர்.

பெரிய சைஸ் தேவையில்லை
திருமண அழைப்பிதழ் என்றாலே பெரிய சைஸில்தான் இருக்க வேண்டுமா என்ன? கைக்கு அடக்கமாக பர்ஸில் வைக்கும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போல் இருந்தால் எப்படி இருக்கும்?

டெபிட் கார்டில் அழைப்பிதழ்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டெபிட் கார்டு போல் திருமண அழைப்பிதழை அச்சடித்துள்ளார். அதில் முன் பகுதியில் லைப் வங்கி என்றும் கார்டு நம்பருக்கு பதிலாக திருமணம் நடைபெறும் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டும் உள்ளார்.

என்னென்ன உள்ளது?...
அதோடு அந்த கார்டானது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகுமாம். பின்பக்கத்தில் மணமகள், மணமகன் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்றும், திருமணம் நடைபெறும் இடம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். உங்க வருகையை பற்று வைத்துவிட்டு, இனிய நினைவுகளை எடுத்துச் செல்லுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலக்காட்டில் திருமணம்
இந்த திருமணமானது வருகிற ஜூலை 9-ஆம் தேதி நடைபெறுகிறது. மணமகன் பெயர் ஷஹீம் கான், மணமகள் பெயர் ஆயிஷா ஆகும். இவர்களது திருமணம் பாலக்காட்டில் நடைபெறுகிறது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications