வாழ்த்த வருபவர்களுக்கு ஆளுக்கொரு 'டெபிட்' கார்டு! பாலக்காட்டில் பலே திருமணம்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டெபிட் கார்டு போல் திருமண அழைப்பிதழை அச்சடித்துள்ளார்.
சென்னை: டெபிட் கார்டில் திருமண அழைப்பிதழை அச்சடித்து புதுமையை புகுத்தியுள்ளார் ஒரு இளைஞர்.
திருமணம் என்றாலே அதில் முக்கிய இடத்தை பிடிப்பது அழைப்பிதழ்கள்தான். திருமணமானது சிறப்பாக களைகட்ட அழைப்பிதழ்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை கொண்டு உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் ஒரு இடத்தில் கூட வைக்கமுடியும்.
அந்த திருமண அழைப்பிதழில் புதுமை செய்யும் அந்த திருமணத்துக்கு எதிர்பார்ப்பு என்று வலுக்க தொடங்கும். தற்போது திருமணங்களில் பல்வேறு வகையான புதுமைகளை புகுத்தி வருகின்றன.

தாம்பூல பை
தாம்பூல பைகளில் வைக்கப்படும் தேங்காய், பழம் ஆகியவற்றுக்கு பதிலாக மரம் நடுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கி வருகின்றனர். இன்னும் சிலரோ புத்தகங்களையும் தாம்பூலமாக வழங்குகின்றனர்.

புதுமையானது
அதேபோல் திருமண அழைப்பிதழ்களை பொருத்தவரை குறைந்த விலையிலிருந்து அதிக விலை வரை நம் வசதிக்கேற்ப அடித்துக் கொள்ளலாம். அதிலும் புதுமைகளை புகுத்தி வருகின்றனர்.

பெரிய சைஸ் தேவையில்லை
திருமண அழைப்பிதழ் என்றாலே பெரிய சைஸில்தான் இருக்க வேண்டுமா என்ன? கைக்கு அடக்கமாக பர்ஸில் வைக்கும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போல் இருந்தால் எப்படி இருக்கும்?

டெபிட் கார்டில் அழைப்பிதழ்
கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டெபிட் கார்டு போல் திருமண அழைப்பிதழை அச்சடித்துள்ளார். அதில் முன் பகுதியில் லைப் வங்கி என்றும் கார்டு நம்பருக்கு பதிலாக திருமணம் நடைபெறும் தேதி மற்றும் நேரத்தை குறிப்பிட்டும் உள்ளார்.

என்னென்ன உள்ளது?...
அதோடு அந்த கார்டானது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகுமாம். பின்பக்கத்தில் மணமகள், மணமகன் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்றும், திருமணம் நடைபெறும் இடம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். உங்க வருகையை பற்று வைத்துவிட்டு, இனிய நினைவுகளை எடுத்துச் செல்லுங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலக்காட்டில் திருமணம்
இந்த திருமணமானது வருகிற ஜூலை 9-ஆம் தேதி நடைபெறுகிறது. மணமகன் பெயர் ஷஹீம் கான், மணமகள் பெயர் ஆயிஷா ஆகும். இவர்களது திருமணம் பாலக்காட்டில் நடைபெறுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications