ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு: 500 மதிமுகவினர் கைது! ஆந்திர பஸ்களை சிறைபிடித்து த.வா.கா போராட்டம்!!
திருத்தணி: ஆந்திரா மாநிலம் நகரி அருகே ராஜபச்சே உருவ பொம்மையை எரித்த ஐநூறுக்கும் மேற்பட்ட மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் திருப்பதியில் அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து காஞ்சிபுரம் அருகே ஆந்திரா பேருந்துகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சிறைபிடித்தனர்.
இலங்கை அதிபர் ராஜபக்சே திருப்பதி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கழகப் பொருளாளர் டாக்டர் மாசிலாமணி தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் திருவள்ளூர்- டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், காஞ்சி -பாலவாக்கம் சோமு, விழுப்புரம் வடக்கு ஏ.கே.மணி, விழுப்புரம் தெற்கு க.நடராசன் மற்றும் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பூவை பாபு, திருவள்ளூர் மாவட்டத் துணைச் செயலாளர் ஆவடி அந்திரிதாஸ் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மதிமுகவினர் ராஜபக்சேவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு திருத்தணியில் இருந்து திருப்பதி நோக்கி கறுப்புக்கொடி காட்டுவதற்கு பேரணியாகச் சென்றனர்.

ஆந்திர மாநில எல்லையான நகரி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது ஆந்திர போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து நெடுஞ்சாலையில் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்து, ஒரு மணி நேரம் சாலை மறியலில் மதிமுகவினர் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட மதிமுகவினரை ஆந்திர போலீசார் கைது செய்து நகரியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதேபோல் திருப்பதியில் ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திரா பேருந்துகள் சிறைபிடிப்பு
இதற்கிடையே, காஞ்சிபுரம் அருகே ஆந்திரப் பேருந்துகளை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ளைகேட் என்ற இடத்தில், 3 ஆந்திரப் பேருந்துகளை சிறை பிடித்து வாழ்வுரிமை கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

திருப்பதியில் அரசியல் கட்சியினர் மற்றும் தமிழக பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இருப்பினும் அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications