மக்களை குழப்பி பயமுறுத்தக் கூடாது.. ஸ்டாலினுக்கு ஆர்பி உதயக்குமார் அட்வைஸ்
மக்களை குழப்பும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் ஸ்டாலின் பேசக்கூடாது என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரை: மக்களை குழப்பும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் ஸ்டாலின் பேசக்கூடாது என அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழையால் தாழ்வானப் பகுதிகளில் தண்ணீ தேங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.

இந்நிலையில் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தாழ்வானப் பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
மழை பாதிப்பு நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தவறான தகவல்களை தெரிவித்து வருவதாக அவர் குற்றம்சாட்டினார். மக்களை குழப்பும் வகையிலும் அச்சறுத்தும் வகையிலும் ஸ்டாலின் பேசக்கூடாது என்றும் அவர் கூறினார்.
நியாயமான நடவடிக்கைகளை பாராட்டக்கூட வேண்டாம், எதுவுமே செய்யவில்லை என கூறக்கூடாது என்றார். எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிக்கு அறிவுரைகளை வழங்கலாம் என்றும் அவர் கூறினார்.
சாதாரண மழையால் தண்ணீர் தேங்காது என்ற அவர், கனமழை பெய்ததால் தான் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதாக கூறினார். மக்கள் தங்குவதற்கு தேவையான மாற்று இடங்கள் முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கூறினார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது?












Click it and Unblock the Notifications