விவசாயிக்கு கடன் தர மறுக்கும் அதிகாரி மீது நடவடிக்கை பாயும் - அமைச்சர் செல்லூர் ராஜூ
பயிர்க்கடனை கட்டாத விவசாயிகளுக்கு கடன் இல்லை என்று சொல்லும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்குறுதி அளித்துள்ளார்.
திருச்சி: விவசாயிகள் பயிர்க்கடன் முழுவதையும் கட்டினால் தான் கடன் கொடுக்கப்படும் என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகள் சொன்னால் அவர்களை நிச்சயம் உயர் அதிகாரிகள் தண்டிப்பார்கள் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
திருச்சியில் பொது விநியோகக் கடையை திறந்து வைத்து அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார். அப்போது, பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் புகைப்படம் மற்றும் பயனாளிகளின் குறிப்புகள் மாறிவிடுகிறது. எந்த தகவல்களும் மாறாமல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கூட்டுறவு வங்கிகளில் அதிகாரிகள் விவசாயிகளிடன் பயிர்க்கடன் முழுவதையும் கட்டினால் தான் அடுத்த கடன் வாங்கப்படும் என கூறினால் அந்த அதிகாரி மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என கூறினார். இப்பேட்டியின் போது அமைச்சர் செல்லூர் ராஜூவுடன், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உடன் இருந்தார்.












Click it and Unblock the Notifications