கமலுக்கு கண்ணியத்தோடு பதில் சொல்லியிருக்க வேண்டும்: ஒதுக்கிய அமைச்சர்களுக்கு டிடிவி அறிவுரை!
நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர்கள் கண்ணியத்தோடு பதில் சொல்லியிருக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு அமைச்சர்கள் கண்ணியத்தோடு பதில் சொல்லியிருக்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் கமல்ஹாசனின் விமர்சனம் குறித்தும் அதற்கு அமைச்சர்கள் அளித்த பதில் குறித்தும் கேள்விகள் எழுப்பட்டன.

அதற்கு பதிலளித்த டிடிவி தினகரன், கமல்ஹாசன் ஒரு சிறந்த நடிகர் என்றார். பிரபலமான அவர் அரசாங்கத்தை பற்றி கருத்து கூறியிருக்கிறார். அதற்கு அவருக்கு சுதந்திரமும், உரிமையும் இருக்கிறது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அதேநேரத்தில் அவர் காழ்ப்புணர்ச்சியோடு சொல்லி இருக்கிறாரோ, சுய விருப்பு, வெறுப்போடு சொல்லியிருக்கிறாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தாமல், பொதுவாக எல்லா துறைகளிலும் ஊழல் பெருகிவிட்டது என்று தொனியில் கூறியிருக்கிறார். அதனை தகுந்த ஆதாரங்களுடன் கமல் சொல்லி இருக்கலாம் என்றும் டிடிவி தினகரன் கூறினார்.
மேலும் அவரை எதிர்கொள்ள வேண்டிய அமைச்சர்கள் ஒருமையில் பதில் கூறாமல், கண்ணியத்தோடு விமர்சனங்களை தகுந்த முறைப்படி அணுகியிருக்கவேண்டும் என அறிவுறுத்தினார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கற்று தந்த பாதையிலே கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை காத்து பதில் சொல்லி இருந்தால், இதுபோன்ற நிகழ்வு வந்திருக்காது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications