மக்கள் வறுமையால் வாடும் நிலையில் சம்பள உயர்வு தேவையா? எம்எல்ஏக்களுக்கு ஹைகோர்ட் கிளை நறுக்!
மக்கள் வறுமையால் வாடும் நிலையில் சம்பள உயர்வு தேவையா என ஹைகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை: மக்கள் வறுமையால் வாடும் நிலையில் சம்பள உயர்வு தேவையா என ஹைகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏக்களுக்கான ஊதியத்தை அண்மையில் இருமடங்காக உயர்த்தி அறிவித்தார். விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இதுகுறித்து பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் வறட்சியால் விவசாயம் பாதித்துள்ளது. பலர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர்.

விவசாயிகள் தற்கொலை
கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பளம் 55 ஆயிரத்திலிருந்து, ஒரு லட்சத்து 5000 ரூபாயாக ஜூலை 19 ல் அரசு உயர்த்தியுள்ளது.

சம்பள உயர்வை நிறுத்த வேண்டும்
இதை நிறுத்தி வைக்க தமிழக தலைமைச் செயலர், நிதித்துறை செயலர், சட்டசபை செயலர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகள் வேதனை
இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், விவசாயிகள் தற்கொலை, கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலையில் மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என வேதனை தெரிவித்தனர்.

சம்பள உயர்வு தேவையா?
இந்நிலையில், சம்பள உயர்வு தேவையா என்பதை எம்.எல்.ஏ.,க்கள் தங்களுக்குள்ளே கேள்வி எழுப்பி சிந்திக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் தமிழக நிலை குறித்து அரசுதான் தீர்மானிக்க முடியும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கு தள்ளுபடி செய்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications