மக்கள் வறுமையால் வாடும் நிலையில் சம்பள உயர்வு தேவையா? எம்எல்ஏக்களுக்கு ஹைகோர்ட் கிளை நறுக்!
மக்கள் வறுமையால் வாடும் நிலையில் சம்பள உயர்வு தேவையா என ஹைகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை: மக்கள் வறுமையால் வாடும் நிலையில் சம்பள உயர்வு தேவையா என ஹைகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏக்களுக்கான ஊதியத்தை அண்மையில் இருமடங்காக உயர்த்தி அறிவித்தார். விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இதுகுறித்து பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் தமிழகத்தில் வறட்சியால் விவசாயம் பாதித்துள்ளது. பலர் வேலைவாய்ப்பு இழந்துள்ளனர்.

விவசாயிகள் தற்கொலை
கடன் சுமையால் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக எம்.எல்.ஏ.,க்களுக்கு சம்பளம் 55 ஆயிரத்திலிருந்து, ஒரு லட்சத்து 5000 ரூபாயாக ஜூலை 19 ல் அரசு உயர்த்தியுள்ளது.

சம்பள உயர்வை நிறுத்த வேண்டும்
இதை நிறுத்தி வைக்க தமிழக தலைமைச் செயலர், நிதித்துறை செயலர், சட்டசபை செயலர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ரமேஷ் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

நீதிபதிகள் வேதனை
இந்த மனு நீதிபதிகள் சசிதரன், சாமிநாதன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், விவசாயிகள் தற்கொலை, கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலையில் மக்கள் வறுமையில் வாடுகின்றனர் என வேதனை தெரிவித்தனர்.

சம்பள உயர்வு தேவையா?
இந்நிலையில், சம்பள உயர்வு தேவையா என்பதை எம்.எல்.ஏ.,க்கள் தங்களுக்குள்ளே கேள்வி எழுப்பி சிந்திக்க வேண்டும் என தெரிவித்தனர். மேலும் தமிழக நிலை குறித்து அரசுதான் தீர்மானிக்க முடியும் என்று கூறிய நீதிபதிகள் வழக்கு தள்ளுபடி செய்தனர்.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா












Click it and Unblock the Notifications