மோடியின் மூன்றாண்டு கால ஆட்சி வேதனையானது - விஷன் இந்தியா கட்சி பொன்ராஜ் 'எக்ஸ்ளூசிவ்'
மோடி தன் மூன்றாண்டு கால அரசின் வேதனைகளையும் சோதனைகளையும் மறைக்கத்தான் மாட்டிறைச்சி தடை சட்டம் கொண்டு வந்துள்ளார் என விஷன் இந்தியா கட்சியின் தலைவர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை: மோடியின் மூன்றாண்டு கால ஆட்சியின் வேதனைகளையும் சோதனைகளையும் மறைக்கத்தான் மாட்டுக்கறிக்கு தடை விதித்து பிரச்சனையை உருவாக்கியிருக்கிறது மோடி அரசு என விஷன் இந்தியா கட்சியின் தலைவர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.
விஷன் இந்தியா கட்சியின் தலைவர் பொன்ராஜ் ஒன் இந்தியாவுக்கு சிறப்பு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் கூறியுள்ளதாவது: மோடியின் மூன்றாண்டுகால வேதனைகளை மறைக்கும் எண்ணத்துடன் பொருத்தமே இல்லாதவகையில் மாட்டிறைச்சி தடை சட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்ர்தால், நிற்காத ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து நாடு முழுவதும் தேவையில்லாத ஒரு விவாதத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
மோடியின் மூன்றாண்டு கலா ஆட்சியில் பல்வேறு தோல்விகள், வேதனைகள் நடந்துள்ளது. இதை மக்கள் மறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மாட்டிறைச்சி விறபனைக்கான தடை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாடுகளை நம்பியிருக்கும் விவசாயிகளுக்கு என்ன வழி என்பதை மத்திய அரசு கூறவில்லை.

மாட்டிறைச்சி ஏற்றுமதி
மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா உலக அளவில் முதல் இடம் பிடித்திருக்கிறது. பிரேசில் கூட இரண்டாவது இடத்தில்தான் உள்ளது. குளிர்பிரதேச நாடுகள் அதிக அளவில் மாட்டிறைச்சியை இறக்குமதி செய்கின்றன. அதற்கு நல்ல சந்தை உள்ளது என்பதை புரிந்துகொண்டு மாட்டிறைச்சியை ஏற்றுமது செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு எந்த தடையும் இல்லை. மாட்டை பிழைப்புக்காக சார்ந்திருக்கும் விவசாயி மாடு விற்பனை செய்யத் தடை என்பது முரண்பாடான உத்தரவு.

மாட்டு இனங்களை அழிக்கும் முயற்சி
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்து மாட்டு இனங்களை அழிக்க முயற்சி செய்த மோடி அரசு, கொல்லைப்புற வழியாக மீண்டும் ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம் மாடு இனங்களை அழிக்க முயற்சித்து வருகிறது. ஆனால் இது ஒரு செல்லுபடியாகாத சட்டம்.

இந்தியாவை யார் ஆள்கிறார்கள்?
மோடி நேரடியாக ஆட்சி செய்கிறாரா அல்லது வேறு யாரேனும் மறைமுகமாக ஆட்சி செய்கிறார்களா என தெரியவில்லை. மோடி நாட்டில் வளர்ச்சியைக் கொண்டு வருவேன் என்று கூறித்தான் வெற்றி பெற்றார். ஆனால் நாட்டை முன்னேற்றுவதில் கவனம் கொள்ளாமல் மாட்டை பிடித்துக்கொண்டு உள்ளார். மோடியின் பாதை தவறான பாதை. அவர் அதை சரி செய்துகொள்ள வேண்டும்.

விவசாயத்துக்கு என்ன செய்தது மோடி அரசு?
நாட்டின் விவசாயத்தை மேம்படுத்துவீர்கள், நதிகளை இணைப்பீர்கள் என்றெல்லாம் நம்பித்தான் மக்கள் மோடிக்கு ஓட்டுப் போட்டார்கள். ஆனால் விவசாயத்துக்கு என்று ஒன்றும் செய்வில்லை. அதை மறைக்க மோடி அரசு மதம், மொழி துவேஷங்களை கையில் எடுத்துக்கொண்டு ஆட்சி செய்கிறது. பிரிவினைவாதத்தை இந்தியாவில் விதைத்துக்கொண்டிருப்பது சரியான போக்கு அல்ல.
வரலாறு மன்னிக்காது
இளைஞர்களும் பொதுமக்களும் மோடி, இந்தியாவின் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து நிலையான வளர்ச்சியைத் தருவார் என்ற எண்ணத்தில்தான் அவரை பிரதமர் ஆக்கினார்கள். ஆனால், அவர் அதற்கு நேர்மாறாக உள்ளார். இதே போக்கில் அவர் சென்றால் அடுத்த முறை அவர் பிரதமராக வெற்றி பெற மாட்டார். மோடியின் இந்த போக்கை வரலாறு மன்னிக்காது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications