கள்ளத்தொடர்பு வைத்த 'குடி'மகன்: ரயில் முன்பு பாய்ந்து மாமியார், மருமகள் தற்கொலை
கடலூர்: குடும்பத் தகராறில் பெண்ணாடத்தில் மாமியார், மருமகள் ஆகியோர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் சோழன்நகரைச் சேர்ந்தவர் சங்கர்(26). தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அவருக்கும் பெண்ணாடம் அருகே உள்ள அருகேரியைச் சேர்ந்த அவரது மாமா மகள் கலைமதிக்கும்(22) கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.
குடிப்பழக்கம் உள்ள சங்கருக்கு சில பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை கலைமதி கண்டுபிடித்துவிட்டார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. சங்கரை அவரது தாய் இந்திராணி(50) கண்டித்தும் அவர் திருந்தவில்லை. இதையடுத்து கலைமதி தான் தற்கொலை செய்யப் போவதாக மாமியார் இந்திராணியிடம் அடிக்கடி தெரிவித்து வந்துள்ளார். அதற்கு இந்திராணியோ இப்படி ஒரு மகனை பெற்றதற்கு நான் தான் தற்கொலை செய்ய வேண்டும் என்று கலைமதியிடம் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை தற்கொலை செய்வது பற்றி மாமியார், மருமகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கலைமதி தற்கொலை செய்ய பெண்ணாடம் ரயில் நிலையத்திற்கு செல்ல அவவரை இந்திராணியும் பின் தொடர்ந்தார். ரயில் நிலையத்தில் இந்திராணி கலைமதியை எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் முடியவில்லை.
அப்போது அங்கு வந்த நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு இந்திராணி பாய, அடுத்த நொடியே கலைமதியும் ரயில் முன்பு குதிக்க இருவரும் உடல் சிதறி பலியாகினர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications