சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 21ல் திறப்பு: பொது மக்களுக்கு ஒப்படைக்கிறார் ஜெ.

சென்னையில் ஓமந்தூரர் தோட்டத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம் 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஏழை மக்கள் உயர் சிகிச்சை பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் இந்த மருத்துவமனை சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை செயல்பாட்டிற்கு தயார்படுத்தும் வகையில் இரவு பகலாக இறுதி கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
634 கோடியில்....
புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள 634 கோடி பொதுப் பணித்துறைக்கு ஒதுக்கப்பட்டது. தரை தளம் மற்றும் 6 தளங்களில் வார்டுகள், ஆபரேஷன் தியேட்டர், நிர்வாக அலுவலகம், 'ஆய்வுக்கூடம்' போன்றவை அமைய உள்கட்டமைப்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
குளு குளு வசதி
தனியார் மருத்துவமனையை விட நவீன தொழில் நுட்ப கருவிகள், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், சி.டி.ஸ்கேன் பரிசோதனை உபகரணங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. முற்றிலும் ஏ.சி. வசதி செய்யப்பட்ட இந்த மருத்துவமனையில் ரூ.76 கோடிக்கு நவீன உபகரணங்கள் வாங்கி பொறுத்தப்பட்டுள்ளன.
400 நோயாளிகள்
இங்கு 400 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறக்கூடிய வகையில் மருத்துவ வசதி உள்ளது. இங்கு மற்ற மருத்துவமனைகளில் இல்லாத உயர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். நரம்பியல்துறை, இருதய நோய் மற்றும் இருதய அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை. புற்றுநோய்க்கு 3 சிறப்பு பிரிவின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும்.
புற்றுநோயாளிகளுக்கு
மருந்து மூலம் சிகிச்சை பெறக்கூடிய புற்று நோயாளிகள், அறுவை சிகிச்சை புற்று நோயாளிகள், கதிர்வீச்சு புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படும்.
சிறுநீரகவியல் துறை
மேலும் சிறுநீரகம் அறுவை சிகிச்சை, ரத்தம் சுத்திகரிப்பு (டயாலிசஸ்) செய்தல் போன்ற சிகிச்சை முறைகள் 9 தனி சிறப்பு துறையினர் கீழ் அளிக்கப்படும்.
இது தவிர 3 பரிசோதனை கூடங்கள், எக்ஸ்ரே, நுண்ணு ரியல், உயிர் வேதியியல், நோய் கண்டறிதல் துறையும் இடம் பெறுகிறது.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி
இந்தியாவில் எங்கும் கிடைக்காத உயர் மருத்துவ சிகிச்சை இந்த 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனையில் கிடைக்கும்.
புதிய மருத்துவமனைக்கு தேவையான சிறப்பு டாக்டர்கள், நர்சுகள், தொழில் நுட்ப துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் உபகரணங்கள் பொருத்தப்பட்டன. படுக்கைகள் வரிசையாக போடப்பட்டுள்ளது.
பேட்டரி கார் வசதி
நோயாளிகளை பரிசோதனை கூடங்களுக்கு அழைத்து செல்ல பேட்டரி கார் வசதி உள்ளது.
நோயாளிகள் வசதிக்காக 500 தனித்தனி கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. நோயாளிகள் மட்டுமே வார்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் வார்டுக்கு வெளியே இருக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
சிறப்பு இயக்குநர் நியமனம்
இந்த மருத்துவமனை சுகாதாரத் துறையினர் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் வகையில் இயக்குனர் ஒருவர் நியமிக்கப்படுகிறார். அவரது கட்டுப்பாட்டில் 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை செயல்படும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications