தினகரனை இப்தாருக்கும் கூப்பிடலை, ஜனாதிபதி தேர்தலுக்கும் ஆலோசிக்கலை- நாஞ்சில் சம்பத் கண்டனம்
தினகரனை ஒதுக்கி வைக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முடிவுக்கு நாஞ்சில் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜனாதிபதி தேர்தலில் தினகரனை கலந்து ஆலோசிக்காமல் பாஜக வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்ததற்கு அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நாஞ்சில் சம்பத் பதிவிட்டுள்ளதாவது:
இரு ,மூன்று தினங்களாக வலைத்தளங்களிலும் ,ஏடுகளிலும் வந்து கொண்டு இருக்கிற செய்திகள் நெஞ்சில் வேலாகப் பாய்கிறது. டிடிவி தினகரன் ஓரம் கட்டப்படுகிறார், அவரை ஒதுக்கிவைக்க முடிவு, அவரை விரட்ட பொதுக்குழு என்றெல்லாம் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
கோடிநிலாக்களுக்கு குளிர்ச்சி தருகிற டிடிவி தினகரனை வைத்தே இன்றைய தமிழ்நாட்டு அரசியல் சக்கரம் சுழல்கிறது. அவருடைய எச்சிலை எடுத்தே துப்புக்கெட்டவர்கள் அவர் மீது துப்ப முயற்சிக்கிறார்கள்.

அவமானப்படுத்துகிறார்கள்
அவருடைய நிழலில் ஒதுங்கி உயிரே வாழ்ந்தவர்கள் அவர் பாதத்திற்கு கீழே பள்ளம் தோண்டுகிறார்கள், அவரை அவமானப்படுத்தவதிலும்,காயப்படுத்துவதிலும் சுகம் காணுகிற இடம் தேடிகள் எல்லாம் சாசுவதம் என்று நம்புகிறார்கள்.

குழிபறிக்க திட்டம்
மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்தது போல வரப்போகிற குடியரசு தலைவர் தேர்தலை முன்னிட்டு குழிபறிக்க திட்டமிடுகிறார்கள். கட்சியின் பொதுச் செயலாளர், துணைப் பொதுச் செயலரும் தான் கட்சி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல அதிகாரம் இருக்கிறது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

இப்தாருக்கு அழைப்பு இல்லை
இஸ்லாம் மார்க்கம் மானுடத்திற்கு மதிப்பு தந்த மார்க்கம். ஆண்டவனை தொழுவதற்கே பள்ளிவாசலில் இருந்து பாங்கு அழைப்பு வந்தால் தான் தொழுவதற்கு செல்வார்கள். கழகத்தின் சிறுபான்மை பிரிவு நடத்திய இப்தார் விருந்தில் எங்கள் துணைப் பொதுச் செயலருக்கு அழைப்பே இல்லை.

யார் சிறந்த அடிமை
அவரை நெஞ்சம் நிறைய நேசிக்கிற லட்சக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் ஏன் எங்கள் தலைவனை நிராககிறீர்கள் என நெஞ்சுடைந்து கேட்கிறார்கள். குடியரசு தலைவர் தேர்தலில் துணைப் பொதுச் செயலாளரை ஆலோசிக்காமல் ஏக மனதாக ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு தெரிவித்து யார் சிறந்த அடிமை என்பதை நிரூபிக்க டெல்லிக்கு பறந்து விட்டார்கள்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications