கடற்படை ஊழியருக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு... மதுரையில் சிகிச்சை பலனின்றி பலி
மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த கடற்படை ஊழியர் ஒருவர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் (39). இவர் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியில் உள்ள கடலோர காவல் படையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, சிறப்பு தனி வார்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இது குறித்து மருத்துவமனையின் டீன் வைரமுத்துராஜு கூறுகையில், ‘‘ உயிரிழந்த ரமேஷ் என்பவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, முற்றிய நிலையில் அவர் மருத்துவமனைக்கு வந்ததால் அவரை காப்பாற்ற இயலவில்லை என்று கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications