பச்சையாற்றில் தடுப்புகள் உடைந்து கிராமத்தை தண்ணீர் சூழ்ந்ததால் பதற்றம்
நெல்லை: களக்காடு அருகே பச்சையாற்றில் தடுப்புகள் உடைந்ததால் வெள்ள நீர் கிராமத்தில் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அசவர அவசரமாக பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக 10 அணைகள் நிரம்பி விட்டன. மணிமுத்தாறு அணையும் நிரம்பும் நிலைக்கு வந்து விட்டது. தாமிரபரணி ஆற்றில் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் அணைகளின் உபரி நீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து பெய்த மழையால் 50 கன அடி கொள்ளளவுகொண்ட பச்சையாறு அணை முழு கொள்ளளவை எட்டி விட்டது. இதனால் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த உபரி நீரால் களக்காடு, பச்சையாறு, உப்பாறு, நாIங்குநேரியான் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ள காலங்களில் உபரி நீர் வந்தால் திடியூரில் உள்ள தடுப்பணைக்கு வருவது வழக்கம். தற்போது பச்சையாற்றில் வெள்ளம்கரைபுரண்டு ஓடுவதால் திடியூருக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மாலை தடுப்பணையில் தண்ணீர் லேசாக கசித்து வெளியேறியதால் தமிழக்குறிச்சி கிராமத்தின் உள்பகுதியில் வெள்ளம் புகுந்தது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் உடனடியாக குடியிருப்புகளை காலி செய்து விட்டு பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்தனர்.
இவர்கள் திடியூர் சமூக நலகூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் சாலையில் தண்ணீர் ஓடுவதால் அங்கு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுபோல் நெல்லை சிந்துபூந்துறை படித்துறையை ஓட்டிய பகுதிகளில் உள்ள வீடுகளிலும் தாமிரபரணி வெள்ள நீர் புகுந்தது. இதனால் அங்கு பொதுமக்கள் பதற்றத்தில் உள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications