சேலத்தில் 16 பேருக்கு கண்பார்வை பாதிப்பு: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்
சென்னை: மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது குறித்து தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு மருத்துவமனையில் இம்மாதம், 14ம் தேதி, ஏழு பேர், 15ம் தேதி, எட்டு பேர்; 16ம் தேதி, எட்டு பேர் என, மொத்தம், 23 பேருக்கு டாக்டர்கள் ராஜேந்திரன், தமிழ்செல்வி, சுபா, நித்யா ஆகியோர் கண் புரை அறுவை சிகிச்சை செய்தனர். சிகிச்சை முடிந்து, இரு நாட்களுக்கு பின், நோயாளிகள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.

அவர்களது கண்களில் ஊற்றுவதற்காக சொட்டு மருந்து வழங்கினர். இதை ஊற்றிய பின்னரும் யாருக்கும் குணமாகவில்லை. ஆனால், ஐந்து ஆண்கள், 11 பெண்கள் என, மொத்தம், 16 முதியவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்த கண்ணில் சீழ் பிடித்து, கண் பார்வை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்து, தானாக முன் வந்து வழக்குப் பதிவு செய்த தேசிய மனித உரிமை ஆணையம், அரசு மருத்துவமனையில் நடந்த இந்த சம்பவத்துக்கு விளக்கம் கேட்டு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
மார்ச் 31 ஆம் தேதி தான் கடைசி நாள் : உடனே சொத்து வரி செலுத்த சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்! -
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரானார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! ஸ்டாலின் பங்கேற்பு -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
தனியே தன்னந்தனியே.. தனிமரமாய் தமிழ்நாட்டை விட்டுப் போன ஆர்என் ரவி! யாருமே கண்டுக்கலையே! பரபர சீன்! -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications