நிதி ஆயோக்கில் மாநில அரசுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும்- வெங்கையா நாயுடு
சென்னை: திட்டக் குழுவுக்கு மாற்றாக மத்திய அரசு உருவாக்கியுள்ள 'நிதி ஆயோக்"க்கில் மாநில அரசுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் வெங்கையா நாயுடு கூறியதாவது:
திட்டக்கமிஷனுக்கு பதிலாக உருவாக்கப்பட்டுள்ள நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பில் மாநில அரசுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். நிதி ஆயோக் குறித்து அனைத்து மாநில பிரதிநிதிகள், முதல்வர்களுடன் ஏற்கனவே ஆலோசனை நடத்திய பின்னர் இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சி நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதற்காக இந்த அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்த அமைப்பு மூலம் மாநிலங்களுக்கு நிதி பங்கீடு செய்யும்போது வெளிப்படை தன்மையும், வளர்ச்சியும் தெரியும். ஆனால் காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாட்டின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியாமல் தடுத்து வருகிறது காங்கிரஸ்.
இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications