கேபி முனுசாமி இருக்கும் வரை இரு அணிகள் இணைய வாய்ப்பே இல்லை… "தினகரன்" புகழேந்தி ஆவேசம்
ஓபிஎஸ் அணியில் கே.பி. முனுசாமி இருக்கும் வரை இரு அணிகள் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
சென்னை: முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி இருக்கும் வரை பிளவுபட்டுள்ள அதிமுகவின் இரு அணிகளும் இணையும் வாய்ப்பே இல்லை என்று தினகரன் ஆதரவாளரான புகழேந்தி கூறியுள்ளார்.
சென்னை தலைமை செயலகத்திற்கு வந்த புகழேந்தி செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
முடிந்து போன முதியோர் இல்லமாக ஓபிஎஸ் அணி உள்ளது. நாஞ்சில் சம்பத் குறித்து கே.பி. முனுசாமி தரக்குறைவாக பேசியுள்ளார். இது கடும் கண்டனத்திற்குரியது.

இரு அணிகளின் இணைப்பு பற்றி, ஓபிஎஸ் அணியினர் வந்தால் இணைப்பிற்கு வரவேற்போம், இல்லை என்றால் தொங்கிக் கொண்டு பின்னால் போக நாங்கள் தயாராக இல்லை என்று சேலத்தில் முதல்வர் பழனிச்சாமி சொல்லியிருக்கிறார். அதனால் நாங்கள் அவர்கள் பின்னால் போகத் தயாராக இல்லை.
ஓரிரு அமைச்சர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் இணைப்பு குறித்து தவறாக பேசவில்லை. எந்த ஒரு எம்எல்ஏவும் தவறாக பேசவில்லை. இந்த ஆட்சியின் முதல்வர் மற்றும் அதிமுகவின் செயலாளர் என யாருமே தவறாக பேசவில்லை.
தினகரன் யாருக்கு பணம் கொடுத்தார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆக, தினகரன் மீது தொடர்ந்துள்ள வழக்கு ஒரு பொய் வழக்கு. அதனால்தான் அதனை எதிர்த்து நாங்கள் போராட்டம் செய்தோம்.
இரு அணிகள் இணைவதற்கு முனுசாமி தடையாகயில்லை. கே.பி. முனுசாமி இருக்கும் வரை இரு அணிகள் இணைய வாய்ப்பே இல்லை. ஜெயலலிதாவின் சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட படங்கள் நேரம் வரும் போது வெளியிடப்படும் என்று கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications