பாஜகவுடன் தொகுதி உடன்பாட்டுக்கு 5 பேர் குழு அமைத்த வைகோ
சென்னை: மத்தியில் காங்கிரஸ் அல்லாத ஆட்சி அமையும், காங்கிரஸ் கட்சியை வெற்றி கொள்ளும் திறன் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே இருக்கிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக மதிமுகவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையை பாஜக இன்று காலையில் தொடங்கியது.
கூட்டணி பேச்சு வார்த்தைக்காக அமைக்கப்பட்ட மூவர் குழுவில் இடம் பெற்றுள்ள குமாரவேலு, மோகன்ராஜூலு, பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் வானதி ஸ்ரீனிவாசனும் மதிமுக தலைமையகமான தாயகம் வந்திருந்தார்.
மதிமுகவின் ஐவர் குழுவில் உள்ள டாக்டர் இரா.மாசிலாமணி, அ.கணேசமூர்த்தி, இமயம் ஜெபராஜ், புலவர் சே.செவந்தியப்பன், சிவகங்கை மாவட்டச் செயலாளர், டாக்டர் சதன் திருமலைக்குமார், ஆகியோர் வரவேற்றனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் மாநில பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய வைகோ கூறியதாவது:

கூட்டணி பேச்சு வார்த்தை
கூட்டணி தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த மதிமுக சார்பில் 5 பேர் கொண்ட குழு ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்றார்.

காங்கிரஸ் தூக்கி எறியப்படும்
வரலாறு காணாத ஊழல், 528 மீனவர்கள் படுகொலை, ஈழத் தமிழர்கள் கொலைக்கு ஆயுதங்கள் கொடுத்தது என பல்வேறு துரோகம் செய்த காங்கிரஸ் தூக்கி எறியப்பட வேண்டும்.

காங்கிரஸ் எதிர்ப்பு
காங்கிரஸ் கட்சியோடு தேர்தலுக்கு முன்னரோ இல்லை தேர்தலுக்குப் பின்னரோ நேரடியாகவோ, மறைமுகாவோ, கூட்டணி வைத்துக் கொள்ளும் எந்த ஒரு கட்சியுடனும் மதிமுக கூட்டு சேராது என்றார் வைகோ.

மோடி அலை
நாடெங்கும் மோடி அலை வீசுவதாக தெரிவித்த வைகோ, வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறுவது நிச்சயம் என்றார். தமிழகத்தில் இதுவரை இல்லாத ஒரு பரிமாணம் தேர்தலுக்குப் பின்னர் ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

பாஜக கூட்டணியில் மதிமுக
பின்னர் பேசிய மாநில பாஜக தலைவர் பொன் ராதாகிருஷ்ணன், "தே.ஜ. கூட்டணியில் மதிமுக இணைய வந்திருப்பது மகிழ்ச்சி என்றார்.

மோடி சென்னை வருகை
கூட்டணிக்கான பூர்வாங்கப் பேச்சு தொடங்கியுள்ளது, இந்த பேச்சுவார்த்தை தொடரும். வரும் பிப்ரவரி 8-ஆம் தேதி நரேந்திர மோடி சென்னை வரும் போது மதிமுக தலைவர் வைகோ மோடியை நேரில் சந்திக்க வேண்டும்" என்றார்.
-
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா












Click it and Unblock the Notifications