ரஜினியைவிட ஓ.பி.எஸ்ஸுக்கு செல்வாக்கு அதிகமாம்.. இது லயோலா மாஜி மாணவர்கள் சர்வே!
சென்னை: தமிழக அரசியல் நிலவரம் குறித்து லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாடு மக்கள் தொடர்பகம் நடத்திய கருத்துக் கணிப்பில் ரஜினிகாந்த்தைவிட ஓ.பன்னீர்செல்வத்திற்கு தமிழகத்தில் ஆதரவு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த அமைப்பு, தமிழகம் முழுவதும் ஜூன் 9ம் தேதி முதல் 22ம் தேதி வரை கருத்து கணிப்பு நடத்தி இந்த தகவலை வெளிக்கொண்டு வந்துள்ளது. மொத்தம் 5874 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
முதல்வர் பதவிக்கு யாருக்கு அதிக ஆதரவு உள்ளது என்ற கேள்விக்கு அதிகம் மக்கள் ஸ்டாலினுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலினுக்கு ஆதரவு
கருத்து கணிப்பு முடிவில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராவதற்கு 59% மக்கள் ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இவருக்கு அடுத்த இடத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். ஆனால் இருவருக்குமான இடைவெளி என்பது மிகவும் அதிகமாக உள்ளது.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் முதல்வராக 11% மக்கள் ஆதரவு தந்துள்ளனர். மேலும் ஓ.பன்னீர் செல்வத்திற்கு 13% மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். ரஜினிகாந்த்தைவிட பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அதிகமாக உள்ளதாக இக்கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

முதல்வருக்கு ரொம்ப கம்மி
பாமகவின் அன்புமணிக்கு 7% மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 1% மக்கள்தான் ஆதரவு அளித்துள்ளதாக கூறியுள்ளனர்.

திமுகவுக்கு வாய்ப்பு
தற்போது தேர்தல் நடந்தால் திமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு 47% உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது. மேலும் அதிமுக அணிக்கு 15.4%, பாஜக அணிக்கு 29.7%, பாமக அணிக்கு 5% மக்களும் ஆதரவு தருவதாக கருத்துகளை கூறியுள்ளனர்.

திமுக முதலிடம்
மக்கள் பிரச்னையை தீர்க்கும் திறமையான கட்சிகளில் திமுக முதல் இடத்தில் உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அதிமுக 2வது இடத்திலும், பாஜக 3வது இடத்திலும், பாமக 4வது இடத்திலும் உள்ளன.

முன்கூட்டியே தேர்தல்
2019ல் லோக்சபா தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தல் வர வாய்ப்புள்ளது என்று 58.8% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக ஆட்சியை ஆளுநர் கலைக்க சாத்தியம் உள்ளது என்று 30.2% மக்கள் கருத்து கூறியுள்ளனர். அதேநேரம், தற்போதுள்ள அதிமுக அரசு மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக 61 சதவீத மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications