காவிரி ஆற்றில் அனுமதி இன்றி மணல் அள்ளிய விவகாரம்: ஒருவர் கைது
கரூர்: காவிரி ஆற்றில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளிய சம்பவத்தில் குமாரபாளையத்ச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் பல பகுதிகளில் அரசு மணல் குவாரிகள் அமைத்து மணல் அள்ளி வருகின்றது. ஆனால் அதே வேளையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் சிண்டிகேட் அமைத்து, அரசு அனுமதி பெறாமல் உயர் அதிகாரிகளை கையில் போட்டுக் கொண்டு காவிரி ஆற்றின் பல பகுதிகளி்ல் இரவு நேரங்களில் மணல் அள்ளி வந்தனர்.

இந்த நிலையில் என்.புதூர் பகுதி காவிரி ஆற்றில் அனுமதியின்றி இரவு நேரங்களில் லாரி மற்றும் டிராக்டர்களில் மணல் அள்ளப்படுவதாக கரூர் மாவட்ட கலெக்டர் ஜெயந்திக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் ரகசிய தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து காவிரி ஆற்றில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதன் பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், தளவாபாளையம் பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, வாங்கல் பகுதியில் மணல் லாரி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை தடுத்து நிறுத்தி மணல் அள்ளியதற்கான ரசீதை கேட்டபோது அனுமதியின்றி மணல் அள்ளியது தெரிய வந்தது.
இதையடுத்து, நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் குமாரபாளையத்தை சேர்ந்த கோபிநாத் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அரசு அனுமதி இன்றி மணல் அள்ளி வந்த லாரியை பறிமுதல் செய்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications