இன்னும் ஒரே ஒரு "மெட்ராஸ்"தான் பாக்கி இருக்கு பாஸ்...!
சென்னை: இனி "மெட்ராஸ்" என்ற வார்த்தையை அருங்காட்சியகத்தில்தான் காண வேண்டும் போல. நம்மிடையே உலவி வந்த இன்னொரு "மெட்ராஸ்" இப்போது நம்மை விட்டு விலகுகிறது. மெட்ராஸ் ஹைகோர்ட் இனிமேல் சென்னை ஹைகோர்ட் அல்லது சென்னை உயர்நீதிமன்றம் என்று அழைக்கப்படவுள்ளது.
மெட்ராஸ் என்ற வார்த்தை தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்திய மக்களின் வாழ்க்கையிலும் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகி விட்டதை மறுக்க முடியாது. டெல்லிக்கு போகும் தென்னிந்தியர்களைப் பார்த்து இன்றும் கூட மதராசி என்றுதான் அழைக்கிறார்கள்.. அந்த அளவுக்கு "மெட்ராஸ்" தென்னிந்திய மக்களோடு இணைந்து பிணைந்து கிடக்கிறது.
மெட்ராஸ் என்ற வார்த்தை படிப்படியாக தற்போது நீக்கப்பட்டு வருகிறது. அதை முதலில் ஆரம்பித்து வைத்த பெருமை பேரறிஞர் அண்ணாவையே சேரும்.

மெட்ராஸ் ராஜதானி
முன்பு தமிழ்நாட்டுடன் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவின் பகுதிகள் சேர்ந்திருந்தபோது அதற்கு மெட்ராஸ் ஸ்டேட் என்று பெயர். மெட்ராஸ் ராஜதானி என்பார்கள். மாநிலப் பிரிவினைக்குப் பின்னும் கூட மெட்ராஸ் மாகாணம் என்றே இருந்தது. அதை அண்ணாதான் தமிழ்நாடு என்று மாற்றினார். அன்று முதல்- மெட்ராஸ் மறைந்தது.

சென்னையாக மாறிய மெட்ராஸ்
அடுத்து திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது மெட்ராஸ் என்பதை ஆங்கிலத்திலும் சென்னை என்று மாற்றி உத்தரவிட்டார். இதனால் மெட்ராஸ் முழுமையாக மறைந்து சென்னை என்ற பெயர் வியாபித்தது.

மெட்ராஸ் ஹைகோர்ட்
இந்த வரிசையில் மெட்ராஸ் ஹைகோர்ட் தற்போது பெயர் மாற்றப்பட்டு சென்னை உயர்நீதிமன்றமாக உருமாறியுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை நேற்று அளித்தது.

தாய் நீதிமன்றம்
இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களுக்கெல்லாம் தாய் நீதிமன்றம் போல உள்ளது சென்னை உயர்நீமன்றம்தான். இந்தியாவில் அமைக்கப்பட்ட முதல் உயர்நீதிமன்றம் இதுதான். 1862ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாயிலும், கல்கத்தாவிலும் உயர்நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒரு மெட்ராஸ்தான் பாக்கி!
இன்னும் ஒரே ஒரு "மெட்ராஸ்"தான் பாக்கி உள்ளது. அது யுனிவர்சிட்டி ஆப் மெட்ராஸ்.. அதாவது சென்னை பல்கலைக்கழகம். ஒரு பக்கம் எல்லாம் தமிழுக்கு மாறுகிறது என்ற திருப்தி வந்தாலும் கூட மெட்ராஸ் என்ற வரலாறும் படிப்படியாக நம்மை விட்டு மறைவது சற்று வருத்தமாகததான் உள்ளது!
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications