மழையால் எனக்கு மகிழ்ச்சியே.. வெளுத்து வாங்கிய மழை விதைத்த வாசகர்களின் சிந்தனைகள்!
Recommended Video

சென்னை: வெளுத்து வாங்க தொடங்கியிருக்கும் வடகிழக்கு பருவமழை தமிழக மக்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
வடகிழக்கு பருவமழையின் தாக்கம் தொடர்பாக நமது ஒன் இந்தியா வாசகர்களிடம் கருத்துகளைக் கேட்டிருந்தோம். அவ்வளவுதான் அடித்து ஆடி வருகிறார்கள்.
மழை இப்படியெல்லாம் கூட தாக்கத்தையும் சிந்தனைகளையும் விதைக்கிறதா? என வியக்க வைக்கிறது. நமது வாசகர்களின் கருத்துகள்:

மழையால் சந்தோசமே
Lazourn:
"மழை"இது ஆசீர்வாதத்திற்கு அறிகுறி; இப்பொழுது பேய ஆரம்பித்திற்கும் இந்த மழையால் சந்தோஷமே.; நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் இந்த மழை நம்மை உடனடியாக ஒரு மகிழ்ச்சியான மன நிலைக்கு மாற்றிவிடும். மழை சந்தோஷமே

நெரிசல்தான்
Karuna Nidhi:
மகிழ்ச்சி, அனால், போக்குவரத்துக்கு நெரிசல் மற்றும் தேங்கிய நீர்......சொல்லமுடியாது.......

பொறுத்து கொள்வோம்
sathish kv:
மழை என்றாலே ஒரு மகிழ்சி , ஒரு குளிர்ச்சி , சிலிர்ப்பு , எல்லாம். ஒரு வாரம் பொறுத்துக்கொண்டால் அடுத்த ஒரு வருடம் நமக்கு தண்ணீர் தேவை ஈடு செய்யலாம் . மழை என்றாலே மகிழ்சி மட்டுமே .

குடிநீர் பற்றாக்குறை தீரும்
Manikandan Kumaravel:
இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் நம் அடிப்படை தேவைக்கு நீர் மிகவும் அவசியம் என்பதை நாம் கற்று அறிந்த ஒன்றே...!!! இந்த ஆண்டு பொழியும் மழை நீர் மூலம் நமது நிலத்தடி நீர் உயரும் என்றும் குடி நீர் பற்றாக்குறை தீரும் என்றும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்....!!! மழையால் எனக்கு மகிழ்ச்சியே..!!!

நீரை சேமிக்கவில்லையே
keettavan:
மகிழ்ச்சிதான்.., ஆனால் நேற்று பெய்த மழைக்கே ஆங்கங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகள் முழுவதும் தண்ணிர் நிரம்பியுள்ளது நிலத்தடிக்கு செல்லும் மழைநீர் அனைத்தும் வீணாக கால்வாய்க்கு சென்று கடலில் கலக்கிறது. எத்தனைமுறை பட்டாலும் அரசு திருந்துவதாக இல்ல மழைநீரை சேமிக்கப்போவதும் இல்லை. மீண்டும் தண்ணீருக்காக கர்நாடக, கேரளவிடமும் கையேந்திதான் நிற்கப்போகிறது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications