ஜிடிபி 2% வீழ்ச்சியால் ரூ3 லட்சம் கோடி இழப்பு: ப. சிதம்பரம் சாடல்
சென்னை: மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு தொடர்பாக மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
முதலாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5.7% ஆக சரிந்துள்ளது. முந்தைய காலாண்டைக் காட்டிலும் இது 0.4% ஆகும்.
ஆனால் 2016-17 காலாண்டில் 7.9% ஆக ஜிடிபி இருந்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தான் இந்த அளவு சரிவு ஏற்பட்டது என்கிற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
1% decline in GDP is a loss of Rs 1.5 lakh crore. 2% decline is a loss of Rs 3 lakh crore.
— P. Chidambaram (@PChidambaram_IN) August 31, 2017
இது தொடர்பாக தமது ட்விட்டர் பதிவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது. உற்பத்தி குறைவு, குறைந்த முதலீடு, வேலைவாய்ப்பின்ன்மைதான் இதற்கு காரணம்.
GDP and GVA figures are more evidence of Dr Manmohan Singh's indictment of 'monumental mismanagement'.
— P. Chidambaram (@PChidambaram_IN) August 31, 2017
ஜிடிபி தொடர்பான புள்ளி விவரங்கள் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் முன்வைத்த 'மிகப் பெரும் தவறான நிர்வாகம்' என்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக உள்ளன. ஜிடிபி 1% வீழ்ச்சியை சந்தித்தால் ரூ1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்படும்; 2% வீழ்ச்சி ஏற்பட்டால் ரூ3 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என பதிவிட்டுள்ளார்.
The slide in economy continues. Slow growth, low investment and no jobs. An explosive cocktail.
— P. Chidambaram (@PChidambaram_IN) August 31, 2017