பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருவிழா - தீ மிதித்த அதிமுக எம்.பி சத்தியபாமா
ஈரோடு: பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் அதிமுக எம்பி சத்தியபாமா தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.
ஈரோடு மாவட்டம் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் பக்தர்களுடன் அதிமுக எம்பி சத்தியபாமாவும் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

கோபி அருகே உள்ள பாரியூரில் சுமார் 700 ஆண்டுகள் பழமையான பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஜனவரி மாதம் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு கடந்த மாதம் 28ம் தேதி பூச்சாட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. இன்று காலையில் குண்டம் திருவிழா தொடங்கியது. பூச்சாட்டுதலில் இருந்து 15 நாட்கள் விரதமிருந்து, குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்துவதற்காக கோபி மட்டுமின்றி, ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர்.
இன்று காலை அம்மை அழைத்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து நந்தா தீபமும், திருக்கோடியும் ஏற்றப்பட்ட பின்னர் தலைமை பூசாரி குண்டத்திற்கு சிறப்பு பூஜை செய்து முதலில் குண்டம் இறங்கினார். அதைத்தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்.

இன்று அதிகாலையில் திருப்பூர் லோக்சபா எம்பி சத்தியபாமா தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார். அரசு உயர் அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் தீக்குண்டம் இறங்கினர். தமிழகத்திலிருந்து மட்டுமின்றி கேரளா, கர்நாடகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர்.
கொண்டத்துக் காளியம்மனை வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினால் பக்தர்கள் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications