ஆம்னி பஸ்கள் கூடுதல் பணம் பறித்தால் 044 24794709 என்ற எண்ணுக்குப் போன் செய்யுங்கள்!
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக வெளியூர்களுக்கு ஆம்னி பேருந்துகளில் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் கேட்டு நிர்ப்பந்திக்கப்பட்டால் 044 24794709 என்ற எண்ணுக்குப் புகார் தரலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்கதையாகி வருவதால் அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
பொங்கலுக்காக ஊர்களுக்குப் போகும் மக்களிடம் கூடுதல் கட்டணம் கேட்கப்பட்டால், அதுகுறித்து தொலைபேசி மூலமாக புகார் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றும் 1175 அரசுப் பேருந்துகள்
நேற்று முதல் பொங்கல் பண்டிகைக்கான சிறப்புப் பேருந்துகளை தமிழக அரசு இயக்கி வருகிறது. இன்று 1175 பேருந்துகள் பல்வேறு ஊர்களுக்கும் இயக்கப்படுகின்றன. நாளையும் பெருமளவிலான பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அலைமோதும் மக்கள் கூட்டம்
அரசு விட்டுள்ள சிறப்புப் பேருந்துகளில் ஊர்களுக்குச் செல்ல மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

ஆம்னி பஸ்களுக்கும் கூட்டம்
அதேசமயம், ஆம்னி பஸ்களுக்கும் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மக்கள் நெருக்கடியைப் பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாக மக்கள் குமுறுகிறார்கள்.

புகார் தரலாம்
இதைத் தடுக்க அதிக அளவில் பஸ்களில் கட்டணம் கேட்டால், அதுகுறித்து 044 24794709 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரூ. 1000 வரை வசூல் கொள்ளையடிக்கும் ஆம்னி பஸ்கள்
மதுரை, நெல்லை உள்ளிட்ட ஊர்களுக்குப் போகும் வெளியூர் பயணிகளிடம் தலைக்கு ரூ. 1000 வரை ஆம்னி பஸ்களில் கேட்பதாகவும் மக்கள் பகீர் தகவலை வெளியிடுகின்றனர்.
அரசு விட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பஸ்களைப் பயன்படுத்தி அருமையாக ஊருக்குப் போய் பொங்கலைக் கொண்டாடுங்கள் மக்களே...
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications