ஜல்லிக்கட்டு தடைக்கு எதிர்ப்பு... வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி சேலத்தில் அமைதிப் போராட்டம்
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க எந்த முயற்சியும் எடுக்காத மத்திய அரசை கண்டித்து சேலத்தில் உள்ள வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்று வருகிறது.
சேலம்: ஜல்லிக்கட்டு இல்லாத இந்தப் பொங்கல் கறுப்புப் பொங்கல்தான் என்பதை வலியுறுத்தும் வகையில் சேலத்தில் உள்ள வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் குரங்குச்சாவடி அருகே உள்ளது நரசோதிப்பட்டி. இந்த ஊரில் உள்ள அனைத்து வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு மீதான தடை இன்னும் நீடித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஊர் மக்கள் ஒன்று கூடி முடிவெடுத்து தங்களது வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி அமைதிப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும். இந்த ஆண்டு பொங்கல் ஜல்லிக்கட்டோடு நடக்க வழிவகைகளை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு குறித்து இதுவரை அமைதியாக இருக்கும் மத்திய அரசுக்கு கறுப்புக் கொடி ஏற்றி எங்களது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், அதற்கான அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பேரணி, ரயில் மறியல், சாலை மறியல் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், ஊரில் ஊர் மக்கள் அனைவரும் ஒன்று தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடியை ஏற்றி அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications