பணம் இல்லை என்றதால் ஆத்திரம்: தூத்துக்குடியில் வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் வங்கி திறக்கப்பட்ட சில மணி நேரத்தில் பணம் இல்லை என்றதால் பொதுமக்கள் ஆத்திரத்தில் வங்கியை முற்றுகையிட்டனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்துவிட்டதால் பொதுமக்கள் அவற்றை வங்கியில் மாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று 1ம் தேதி என்பதால் பலர் பென்ஷன் வாங்கவும், அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்கவும் வங்கிக்கு படையெடுத்தனர்.

ஏடிஎம்மில் இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் என்பதால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அங்கு திரண்டனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ள கனரா வங்கியில் பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் வங்கி பரிவர்த்தனை தொடங்கி சில மணி நேரத்திலேயே பணம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் வரிசையில் காத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தங்களுக்கு பின்னால் நின்ற சிலருக்கு வங்கி ஊழியர்கள் யாருக்கும் தெரியாமல் பணம் கொடுத்ததகாவும், ஆனால் பல மணி நேரம் கால் கடுக்க வரிசையில் நிற்பவர்களுக்கு பணம் இல்லை என்று சொன்னால் எப்படி என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு வங்கி நிர்வாகம் சரிவர பதில் சொல்லவில்லை. இதில் மேலும் கொதிப்படைந்த பொதுமக்கள் வங்கியை முற்றுகையிட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த கயத்தாறு சப் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications