பெரியாரியப் பெருந்தொண்டர் பேரறிஞர் வே. ஆனைமுத்து காலமானார்- தலைவர்கள், ஆய்வாளர்கள் இரங்கல்
புதுச்சேரி/சென்னை: பெரியாரியப் பெருந்தொண்டர் பேரறிஞர் வே. ஆனைமுத்து (வயது 96) மாரடைப்பால் இன்று காலமானார். வே. ஆனைமுத்து மறைவுக்கு அரசியல் கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள், ஆய்வாளர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1925-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடியில் பிறந்த வே. ஆனைமுத்து 1940-ம் ஆண்டு முதல் தந்தை பெரியாரின் கொள்கை வழி பயணிக்க தொடங்கினார்.

1952-ம் ஆன்டு முதல் தந்தை பெரியாருடன் இணைந்து திராவிடர் கழகத்தில் பணியை தொடங்கினார். அன்று முதல் தாம் மரணிக்கும் வரை பெரியாரின் பெருந்தொண்டராக வாழ்வை நிறைவு செய்திருக்கிறார் வே. ஆனைமுத்து.
1957-ம் ஆண்டு இந்திய அரசியல் சட்டத்தை தந்தை பெரியார் நடத்தினார். அந்த சட்ட எரிப்புப் போராட்டத்தால் இந்தியாவே அதிர்ந்தது. பெரியார் தொண்டர்கள் பல்லாயிரக்கணக்கில் சிறை சென்றனர். அப்போராட்டத்தில் 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார் வே. ஆனைமுத்து.
1970-ல் தந்தை பெரியாரின் இறுதிக் காலத்தில் சிந்தனையாளர் கழகத்தை தொடங்கினார். இதன் சார்பாக உருவாக்கப்பட்டதுதான் பெரியாரைப் பற்றிய, பெரியாரின் எழுத்துகளை தொகுத்து உருவாக்கப்பட்ட பெரியார் ஈ.வே.ரா. சிந்தனைகள் தொகுப்புகள் ஆகும். இதுதான் இன்றளவும் தந்தை பெரியார் குறித்த புரிதல்களுக்கு அடிப்படை தொகுப்புகள் நூலாக இருந்து வருகிறது. இந்த தொகுப்புகளுக்கு தந்தை பெரியாரே வாழ்த்துரையும் வழங்கியுள்ளார்.
தந்தை பெரியார் மறைவுக்குப் பின்னர் வகுப்பு வாரி இடஒதுக்கீடு தொடர்பாக இந்திய மாநிலங்கள் முழுவதும் பிரசாரம் செய்தார். மண்டல் குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக பிற்படுத்தப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கினார். மொரார்ஜி தேசாய், கன்சிராம் என பல வட இந்திய தலைவர்களுக்கும் இடஒதுக்கீடு குறித்த புரிதலில் வழிகாட்டியாக திகழ்ந்தார்.
1975-ல் திராவிடர் கழகத்தில் வெளியேறி பெரியார் சம உரிமை கழகத்தைத் தொடங்கினார் ஆனைமுத்து. 1988-ல் தமது பெரியார் சம உரிமை கழகத்தை மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியாக்கினார். மாதந்தோறும் சிந்தனையாளன் எனும் இதழை வெளியிட்டு வந்தார். அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த நிலையில் புதுவையில் மகனின் இல்லத்தில் தங்கி இருந்த போது இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது உடல் சென்னை இரும்புலியூர் கொண்டுவரப்பட்டு மருத்துவ மாணவர்கள் கல்விக்காக வழங்கப்பட உள்ளது.
பெரியாரியப் பெருந்தொண்டராக வாழ்ந்து மறைந்த வே. ஆனைமுத்து மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள், ஆய்வறிஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications