புதுச்சேரி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையின்போது மின்தடை.. 3 நோயாளிகள் பரிதாப சாவு
டயாலிசிஸ் சிகிச்சை நடைபெற்றபோது திடீரென மின்சாரம் தடைபட்டதால் இரு பெண்கள் உட்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.
புதுச்சேரி: மின்தடை காரணமாக, புதுச்சேரி அரசு மருத்துவமனையில் 3 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி்யை ஏற்படுத்தியுள்ளது. நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையை தாக்கியதால் அங்கு பதற்றம் நிலவியது.
புதுச்சேரி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில்தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. அங்கு சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த கணேஷ், சுசீலா மற்றும் அம்சா ஆகிய 3 நோயாளிகளுக்கு இன்று ரத்த சுத்திகரிப்புக்கான, டயாலிசிஸ் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.

டயாலிசிஸ் சிகிச்சை நடைபெற்றபோது திடீரென மின்சாரம் தடைபட்டுள்ளது. உரிய மாற்று ஏற்பாடுகள் செய்திருக்காததால் சிகிச்சை தடைபட்டு அந்த இரு பெண்களும் முதலில் பரிதாபமாக பலியாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட கணேஷ் சுமார் அரை மணி நேரதம் கழித்து உயிரிழந்தார்.
விவரம் அறிந்ததும், நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனிடையே, உயிரிழந்த நோயாளிகள் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகை வழங்க புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டுள்ளார். மேலும் சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த டாக்டர்கள், நர்சுகள், தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது புதுச்சேரி அரசு.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications