தமிழகத்தில் மின்சாரப் பிரச்சினை இன்னும் தீரவில்லையே! - கருணாநிதி
சென்னை: தமிழகத்தில் மின் பிரச்னை இன்னும் தீரவில்லை. கோடை நெருங்கும் சூழலில் மின் தடை இன்னும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஞாயிறுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
சட்டப் பேரவையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, முடிக்கப்பட்ட மின் திட்டங்கள், கொள்முதல்கள் வாயிலாக 4,640 மெகாவாட் மின்சாரம் பெறப்படுகிறது என்று கூறியுள்ளார். இது, புள்ளி விபரங்கள் இல்லாமல் பொத்தாம் பொதுவாகக் குறிப்பிட்டவையாகும்.

இந்த ஆண்டு படிக்கப்பட்ட ஆளுநர் உரையில், அதிமுக ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் மின் உற்பத்தித் திறன் 3,358 மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் மின் தேவை 13,170 மெகாவாட் ஆகும். ஆனால், மின் உற்பத்தி 12,170 மெகாவாட்தான். அதனால் ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் பற்றாக்குறை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் குடியிருப்புகளுக்கு அறிவிக்கப்படாமல், 2 முதல் 3 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.
வரும் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும் என்பதால் மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட்டைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பல மணி நேரம் மின் தடை செய்யப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த அபாயத்தை மறைக்க அதிமுக ஆட்சியினர் என்ன செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. இந்த நிலையில் மின் தேவையில் தன்னிறைவை எய்தும் நிலையை தமிழகம் எட்டியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறி, மக்களை ஏமாற்றுகிறார்".
-இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications