நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி வலியுறுத்தல்!
நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
Recommended Video

டெல்லி: நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மாநிலங்களுக்கு நிதி அளிக்கும் அமைப்பான நிதி ஆயோக் கின் நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர்களாக மாநில முதல்வர்கள் உள்ளனர்.

ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இக்கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் பழனிச்சாமி நேற்று டெல்லி சென்றார். இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பிரதமர் மோடி விவாதித்ததாக தெரிகிறது.
ஒரே நேரத்தில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை நடத்த மத்திய அரசு விரும்புகிறது. இதனால் நேரம் மற்றும் பணம் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தல் செலவினங்கள் குறையும் என தலைவர்கள் வாதிடுகின்றன.
பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
எல்லா கட்சிகளும் அரசியலுக்கு மேலாக இந்த விவகாரத்தை பார்க்க வேண்டும் என்று மோடி தொடர்ந்து மீண்டும் கேட்டுக் கொண்டார்.
கடந்த ஆண்டு, நிதி ஆயோக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த, இரண்டு கட்டமாக மக்களவை மற்றும் 2024 ல் இருந்து சட்டமன்ற தேர்தல் நடத்த பரிந்துரை செய்யப்பட்டத. ஆனால் இந்த யோசனைக்கு சிறிதளவே ஆதரவு கிடைத்தது.
ஒரே நேரத்தில் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வசதியாக பொது வாக்காளர் பட்டியலை தயாரிக்க பிரதமர் மோடி ஆலோசனை கோரியதாக நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
பொது வாக்காளர் பட்டியல் உருவாக்கினால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து மாநில அரசுகள் பொதுமக்களிடம் கருத்து கேட்கலாம் என்று பிரதமர் மோடி நிதி ஆயோக் கூட்டத்தில் கோரியதாக நிதி ஆயோக் துணை தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலைக் கொண்டு வர தேர்தல் ஆணையம், சட்டக் கமிஷன், நாடாளுமன்ற கமிட்டி ஆகியவை யோசனைகளை முன் வைத்துவருகின்றன. ஆனால், அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
இருப்பினும் ஒருவேளை இந்த முடிவு எடுக்கப்பட்டால் அதற்கு வசதியாக இந்த பொதுவாக்காளர் பட்டியல் குறித்த ஆலோசனையை பிரதமர் மோடி கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 23 மாநில முதல்வர்கள், துணைநிலை அளுநர்கள் பங்கேற்றனர்.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications