அடடே.. தமிழக அரசுக்கு எதிராக திருநாவுக்கரசர் ஒரு கருத்து சொல்லிட்டாரே
அனைத்து மதுக்கடைகளையும் மூடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை விரைவில் அமல்படுத்த வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி: தமிழகத்தில் அனைத்து மதுபானக் கடைகளையும் மூடி, பூரண மதுவிலக்கை விரைவில் கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தாக்கப்பட்டது கண்டனத்துக்குரியது. இதைக் கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளும்.
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்தித்து வறட்சி நிவாரணமாக ரூ.40 ஆயிரம் கோடியும், வர்தா புயல் நிவாரணமாக ரூ.30 ஆயிரம் கோடியும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் ஒரு பைசா கூட ஒதுக்கவில்லை.
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஆந்திரம், கேரளம் ஆகிய அரசுகள் மத்திய அரசின் அனுமதியை மீறி அணைகளைக் கட்டி வருகின்றனர். இந்த விவகாரங்களில் மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் லஞ்சம், ஊழலற்ற ஆட்சி அமைந்தால் நல்லது. தற்போதைய ஆட்சி நீடிக்குமா? என்பது கோர்ட்டு முடிவின்படி தெரியும். எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்றதும் 500 மதுக்கடைகள் மூடப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஆனால் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றவுடன் ஏற்கெனவே மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட 500 கடைகள் இன்னும் மூடப்படாமல் உள்ளன. இந்நிலையில் மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதற்கு பதிலாக அனைத்து மதுக்கடைகளையும் மூடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசின் நல்ல நடவடிக்கைகளை பாராட்டுவோம். மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்ப்போம்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சுப்பிரமணிய சுவாமி கூறிய குற்றச்சாட்டுக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளார் என்றார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications