வர்றாரு.. வர்றாரு.. ராகுல் வர்றாரு.. 'சித்திரைத் திருவிழா'வுக்கு ரெடியாகும் தமிழக காங்கிரஸ்!
சென்னை: காங்கிரஸ் துணைப்பொதுச்செயலாளர் ராகுல் காந்தி தமிழ்நாட்டில் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும், ஆளும் அதிமுகவிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் சத்திய மூர்த்தி பவன் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
2016ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. நானும் ரவுடிதான் என்கிற ரீதியில் காங்கிரஸ் கட்சியும் தயாராகி வருகிறது. போராட்டம் ஏதாவது நடத்தினால்தான் மக்களுக்கு நம் நினைவு வரும் என்று காங்கிரஸ் கட்சியினருக்கு இப்போது தெரியவந்துள்ளது. எனவே ஆளும் கட்சிக்கு எதிரான போராட்டத்தை விரைவில் நடத்த உள்ளனர்.

தனியாக நின்றால் ஒரு இடத்தில் கூட டெபாசிட் கிடைக்காது என்று அவர்களுக்கே தெரியவந்துள்ளது. எனவேதான் திமுக, கூடவே காம்ரேட்டுகளையும் கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்து வருகின்றனர் காங்கிரசார். இதை உறுதிபடுத்தும் விதமாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் சமீபத்திய பேச்சுக்கள் இருக்கவே, காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனராம்.
கட்சியை பலப்படுத்துங்கப்பா
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு மட்டுமே பொதுக்குழு, செயற்குழு உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையா இருக்கணும்
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடந்த விவசாயிகள் பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்றார். அதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், உள்பட 30 பேர் பங்கேற்றனர். அப்போது ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது கட்சி உறுப்பினர்கள் சேர்ப்பு உண்மையாக இருக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு வலியுறுத்தப்பட்டதாம்.
போராட்டத்திற்கு தயாரா?
தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு எதிராக போராட தயாரா என்று தமிழக தலைவர்களை ராகுல் காந்தி கேட்கவே, நீங்கள் தமிழகம் வாருங்கள் இணைந்து போராடலாம் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அழைப்பு விடுத்தாராம். தமிழக அரசுக்கு எதிராக கவர்னரிடம் பேரணியாக சென்று ஊழல் புகார் கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.
சிறை நிரப்ப தயார்
அடுத்த கட்டமாக, சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய, மாநில ஆளும் கட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்று கட்சி மேலிடம் தெரிவித்து இருப்பதால் அந்த கோணத்திலேயே போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று செயற் குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கோஷ்டி மோதல்
தமிழக காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி மோதல் இருக்கக் கூடாது. அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ப.சிதம்பரத்துடன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசியதாக கூறப்படுகிறது. இருவரும் ராசியாகிவிட்டதாகவும் தொண்டர்கள் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இனி கோஷ்டி பூசலுக்கு வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் ராகுல்காந்தி
ராகுல்காந்தி தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்தால் அது கட்சி வளர்ச்சிக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து ராகுல் காந்தியை தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்ய அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாம். அப்போ ராகுல் வரப்போறார்... வலுவான கூட்டணி அமையப்போகிறது என்று உற்சாகத்தில் இருக்கிறார்களாம் காங்கிரஸ் தொண்டர்கள்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications