கன மழை.. சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: கன மழையைத் தொடர்ந்து மழை வெள்ள பாதிப்புக்குள்ளாவோர் நலனுக்காக உதவி எண்களை சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. இன்று இம்மழை தனது முதல் விஸ்வரூபத்தைக் காட்டியது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் பேய் மழை பெய்து மக்களை அச்சுறுத்தி விட்டது. இதையடுத்து நாளை 5 மாவட்டங்களிலும், காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது உதவி எண்களை அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் 1913 என்ற உதவி எண்ணை மாவட்ட ஆட்சித் தலைவர் அரிவித்துள்ளார். அதில் மழை பாதிப்பு குறித்து மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்திற்கான உதவி எண்கள்:
044-27237107, 044-27237207. வாட்சப் - 9445071077, 9445051077.












Click it and Unblock the Notifications