தமிழகம் உட்பட நாடு முழுவதும் ரம்ஜான் பெருநாள்.. உற்சாகத்துடன் கொண்டாட்டம்
சென்னை: தமிழகம் உட்பட நாடு முழுவதும் புனித ரம்ஜான் பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இஸ்லாமிய மார்கத்தின் ஐம்பெரும் கடமைகளில் நோன்பு கடைபிடிப்பதும் ஒன்றாகும். புனித ரமலான் மாதத்தின்போது இந்த கடமையை இஸ்லாமிய பெருமக்கள் நிறைவேற்றுகின்றனர். அதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் ஈகைத் திருநாளாகக் கொண்டாடுகிறார்கள்.
அதன்படி, இந்தாண்டு ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்படுவதாக இருந்தது. ஆனால் பிறை தெரியாததை அடுத்து ஜூலை 7 ம் தேதி (இன்று) ரம்ஜான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், கேரளா, காஷ்மீர், தமிழகத்தின் சில பகுதிகள் உள்ளிட்டவற்றில் நேற்றே ரம்ஜான் கொண்டாடப்பட்டது. பாகிஸ்தான் ஆப்கனிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா, கத்தார், குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளிலும் ஏமன், பாலஸ்தீனம் போன்ற நாடுகளிலும் ரமலான் திருநாள் கொண்டாடப்பட்டது. அங்கு மசூதிகள் உள்ளிட்ட இடங்களில் கூடிய ஆயிரக்கணக்கான ஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் ரம்ஜான் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
புத்தாடை அணிந்து, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்பு வழங்கியும் இஸ்லாமியர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ரம்ஜானை முன்னிட்டு டெல்லியில் உள்ள ஜும்மா மசூதியில் ஏராளமான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications