மீனவர்கள் திருப்தியடையும் அளவுக்கு புயல் நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் ஜெயகுமார்
வர்தா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மீனவர்கள் திருப்தியடையும் வகையில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்
சென்னை : வர்தா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுக்கப்படுவதாக அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மீனவர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
சென்னை மெரினாவில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வர்தா புயலால் ஏறபட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கப்டுவதாக அவர் கூறினார்.
மீன்பிடி வலைகள் மற்றும படகுகள் சேதம் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் துரிதமாக நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.
சேதங்கள் குறித்த முழு தகவல்களும் வந்த பின் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மீனவர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் உறுதியளித்தார்.