குடிக்க நீர் கேட்டு மடக்கிய பொதுமக்கள்… பதில் சொல்ல முடியாமல் திணறி எஸ்கேப்பான அமைச்சர் தங்கமணி
குமாரபாளையம் பள்ளிப்பாளையத்திற்கு வந்த அமைச்சர் தங்கமணியின் காரை மடக்கி குடிநீர் கேட்டு பொதுமக்கள் சரமாரி கேள்வி எழுப்பினர். பதில் சொல்ல முடியாத அமைச்சர் போர்வெல் போட்டுத் தருகிறேன் என்று சொல்லி அங்கி
பள்ளிப்பாளையம்: அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த மூத்த அமைச்சர் தங்கமணியை அவரது சொந்த தொகுதி மக்கள் குடிநீர் கேட்டு முற்றுகையிட்டனர்.
குமாரபாளையம் தொகுதிக்கு உட்பட்ட பகுதி பள்ளிப்பாளையம். இந்த இடத்தில் யூனியன் அலுவலகம் அருகே பட்டா வழங்கும் நிகழ்ச்சி அரசு சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் தங்கமணி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு காரில் ஏறி சென்றார். அப்போது, சபரி நகர் பொதுமக்கள் அமைச்சரின் காரை மறித்து முற்றுகையிட்டனர்.
முற்றுகை
என்ன செய்வது என்று தெரியாத அமைச்சர் தங்கமணி காரில் இருந்து இறங்கினார். அப்போது முற்றுகையிட்ட பொதுமக்கள் எங்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாமல் 15 நாட்களாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம். உங்களுக்குத் தானே நாங்கள் ஓட்டுப் போட்டோம் என்று கேள்வி மேல் கேள்வி எழுப்பினார்கள்.
குடிநீர் முக்கியம்
மேலும், நீங்கள் எதுவும் கண்டுக் கொள்ளாமல் சென்னையில் போய் உட்கார்ந்து கொள்கின்றீர்கள். உங்கள் கட்சிப் பிரச்சனை எவ்வளவு முக்கியமோ, அதைவிட நாங்கள் குடிக்கிறதுக்கு தண்ணீர் முக்கியம் என மக்கள் தங்களது குமுறலை வெளிப்படுத்தினார்கள்.
போர்வெல் குழாய்
பொதுமக்களின் கேள்வி கணைகளால் மிரண்டு போன அமைச்சர் தங்கமணி, அதிகாரிகளிடம் பேசி டிராக்டர் மூலமாக தண்ணீர் வழங்குவதாக கூறினார். அப்பகுதியில் புதிய போர்வெல் அமைக்கப்படும் என உறுதி அளித்துவிட்டு அங்கிருந்து அமைச்சர் எஸ்கேப் ஆனார்.
திணறல்
அமைச்சர்கள் அனைவரும் இரட்டை இலையை காப்பாற்றவும், தங்களது அமைச்சர் பதவியை தக்க வைத்துக் கொள்ளவும் படாதபாடு பட்டு வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் அமைச்சர்களை பார்த்து கேள்வி கேட்பது தொடங்கிவிட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications