ஒழுங்கா இருக்கச் சொல்லு... இன்ஸ்பெக்டரின் மனைவியை வீட்டுக்கு வந்து மிரட்டிய ரவுடி!
சென்னை: சென்னையில் ரவுடிகள் ஒழிப்புப் பிரிவில் இன்ஸ்பெக்டராக இருப்பவரின் மனைவியை, வீட்டுக்கு வந்து மிரட்டிச் சென்ற ரவுடி குறித்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீஸ் குடியிருப்புக்கே வந்து அந்த ரவுடி மிரட்டியதால் காவல்துறையினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த இன்ஸ்பெக்டர் செம்மரக் கடத்தல் விவகாரத்தில் விசாரணையில் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த யாரேனும் இந்த மிரட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் ரவுடி ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் சிவராம்குமார். தூத்துக்குடியைச் சேர்ந்தவர். இவர் அசோக்நகர் போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு வீட்டில் சிவராம் குமாரின் மனைவி சிவகாமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது வெள்ளை சட்டை, கருப்பு பேன்ட் அணிந்த வாலிபர் ஒருவர் சிவராம்குமாரின் வீட்டுக்கு சென்று சிவகாமியிடம் கத்தியை காட்டி மிரட்டியபடி உங்கள் கணவரை ஒழுங்காக இருக்க சொல்லுங்கள். தேவையில்லாத விசயங்களில் அவர் தலையிடுகிறார். இது அவருக்கு நல்லதல்ல. இது போல் தொடர்ந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார் சிவகாமி. இருப்பினும் யந்து போகாமல் துணிச்சலுடன் அந்த வாலிபரிடம் நீ யாருடா? கத்தியால் குத்திருவியா என்று கோபத்துடனும், சத்தமாகவும் கேட்டுள்ளார். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து வேகமாக வெளியேறி ஓடி விட்டார். இதுகுறித்து தனது கணவருக்குத் தகவல் தெரிவித்தார் சிவகாமி. பின்னர் அசோக் நகர் போலீசில் சிவகாமி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பல வருடமாக சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றியுள்ளார் சிவராம்குமார். தி.நகரில் பணியாற்றியபோது பல வழக்குகளில் துப்பு துலக்கி பலரைக் கைது செய்தவராம். தற்போது ரவுடி ஒழிப்பு பிரிவில் பணியாற்றி வருகிறார்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications