ரூ.5.70 கோடி கடன் மோசடி வழக்கு.. பிரபல ஹோட்டல் உரிமையாளர் கைது
ரூ.5.70 கோடி கடன் மோசடி வழக்கில் பிரபல ஹோட்டல் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
சென்னை: பிரபல ஆசிப் பிரியாணி ஹோட்டல் குழும உரிமையாளர் மோசடி வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்டார். கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கோதண்டராமன் என்பவர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.
சென்னையில் மிகப் பிரபலமான உணவகங்களுள் ஒன்று 'ஆசிப் பிரியாணி'. அதன் உரிமையாளர் முகமது ஆசிப். அவர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசில் கோதண்டராமன் என்பவர் ஒரு புகார் கொடுத்தார். அதில், ''ஆசிப் பிரியாணி நிறுவன உரிமையாளர், முகமது ஆசிப். அவரது இரண்டாவது மனைவி நந்தினி. இவர்கள் 2014 ஆகஸ்ட்டில் இருந்து, 2016 வரை, என்னிடம், 5.70 கோடி ரூபாய் கடன் பெற்று, பல கிளைகளை துவங்கினர். கடனுக்கு உத்தரவாதமாக, காசோலைகளை வழங்கினர். அவை, வங்கியில் பணமின்றி திரும்பின.

அதையடுத்து, அவரிடம் பணம் கேட்டபோது, கூலிப்படை வைத்து, கொலை செய்வதாக மிரட்டினார். ஜனவரி, 5ல் என்னை கொல்லும் முயற்சி நடந்தது. அதில், கடவுள் அருளால், நான் காயங்களுடன் தப்பினேன். இது தொடர்பாக, கோடம்பாக்கம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்தாமல் இருக்குமாறும், வாங்கிய கடனை தந்து விடுவதாகவும், ஆசிப்பும், அவரது மனைவி ரம்ஜான் பேகமும், என்னிடம் பேசினர்.
அதன்படி, ஆசிப், 2 கோடி ரூபாய்க்கு, கார்ப்பரேஷன் வங்கி காசோலை கொடுத்தார். மேலும், 2 கோடி ரூபாய்க்கு, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி வரைவோலை கொடுத்தார். காசோலை, வங்கியில் பணமின்றி திரும்பியது. வரைவோலை போலி என, வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீண்டும் அவரிடம் பணத்தை கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, என் பணத்தை மீட்டு தர வேண்டும்''. இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
புகாரை விசாரித்த சென்னை மாநகர காவல் ஆணையர், புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், முகமது ஆசிப் போலி வரைவோலைக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஆசிப் முகமது அவரது இரண்டு மனைவிகளுடன் நேற்று கைது செய்யப்பட்டார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications