குமரியில் ரப்பர் பூங்கா அமைப்பது தொடர்பாக பரிசீலனை - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
குமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரப்பர் பூங்கா அமைவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி: தமிழகத்திலேயே குமரி மாவட்டத்தில்தான் ரப்பர் சாகுபடி நடந்து வருகிறது. ஆகவே மாவட்டத்தின் பொருளாதாரம் பெரும்பாலும் ரப்பரை ஒட்டியே இருந்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் ரப்பர் பயிரிடப்பட்டு வருகிறது. ஆகவேதான் இங்கிருந்து உலகத்தரம் வாய்ந்த ரப்பர் உற்பத்தி நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், அரசு ரப்பர் கழகம் மூலம் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டு, உற்பத்தியும் நடந்து வருகிறது.

கீரிப்பாறை, காளிகேசம், குற்றியாறு, மணலோடை, கோதையாறு, சிற்றாறு, மயிலாறு டிவிஷன்களில் அரசு ரப்பர் கழகம் அதிகம் ரப்பர் பயிரிட்டுள்ளது.
இந்தியாவில் ரப்பர் உற்பத்தியில் கேரளமாநிலம் முதலிடம் வகிக்கிறது. தற்போது சீனாவில் இருந்து ரப்பர் இறக்குமதியாவதால் இங்குள்ள ரப்பர் தோட்டத்தொழிலாளர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். அம்மாநிலத்தில் ரப்பருக்கு பதில் மாற்றுத்தொழிலை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கீரிபாறை அரசு ரப்பர் தோட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் ரப்பர் விலை வீழ்ச்சியை தடுக்கும் வகையில் வெளிநாடுகளிலிருந்து ரப்பர் இறக்குமதி செய்வதை மத்திய அரசுடன் கலந்து பேசி அதனை தடுப்பதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், மேலும் குமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரப்பர் பூங்கா அமைவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார்.

ரப்பர் சாகுபடி நடைபெறுகின்ற குமரி மாவட்ட பகுதியில் ரப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைக்க குமரி மாவட்டம் ஏற்ற பகுதியாகும். இங்கு ரப்பர் ஆராய்ச்சி நிலையம் அமைத்தால் ரப்பர் சாகுபடியில் மேம்பாடும் ஏற்படும் வகையில் புதிய இனங்களை உருவாக்கவும், அதன்மூலம் அதிக உற்பத்தியைப் பெறவும் முடியும். மேலும் கூடுதல் வேலை வாய்ப்புகளும் உருவாகும். குமரி மாவட்டத்தில் ரப்பர் ஆராய்ச்சி மையம் அமைக்க தக்கலையை அருகே உள்ள வேளிமலை பகுதியில் 230 ஏக்கர் நிலம் தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அந்த திட்டம் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
குமரி மாவட்டத்தில் ரப்பர் தொழிற்சாலை, ரப்பர் பூங்கா, ரப்பர் ஆராய்ச்சி மையம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்துவதின் மூலம் ரப்பர் சாகுபடி மேம்பாடு அடைவதுடன் தொழில் வளம் பெருகி வேலை வாய்ப்புகளும் ஏற்படும் என்பது ரப்பர் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications