என் மீதான புகார் ஆவணங்களை தாங்க.. பிரமாண பத்திரம் தாக்கல் செய்றேன்.. விசாரணை கமிஷனில் சசிகலா மனு!
புகார் கொடுத்தவர்கள் அளித்த ஆவணங்களை கொடுக்குமாறு ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை: புகார் கொடுத்தவர்கள் அளித்த ஆவணங்களை கொடுக்குமாறு ஆறுமுகசாமி கமிஷனில் சசிகலா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜெயலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மற்றும் ஜெயலலிதாவுடன் தொடர்புடையவர்களிடம் விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது.

கேள்வி கேட்ட சசி
இந்நிலையில் மவுன விரதம் இருப்பதாக கூறி விசாரணை ஆணையத்தில் ஆஜராக மறுத்த சசிகலா தன் மீது புகார் அளித்தவர்கள் யார் என நீதிபதியிடமே கேள்வி கேட்டார் சசிகலா.

சாட்சியங்களின் ஆவணங்கள்
இந்நிலையில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்வது தொடர்பாக விசாரணை ஆணையத்தில் சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் தன் மீது புகார் அளித்த 22 சாட்சியங்கள் வழங்கிய ஆவணங்களையும் தன்னிடம் தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆவணங்கள் கிடைத்தால்
ஆவணங்களை அளித்தால் 10 நாட்களில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்றும் சசிகலாவின் வழக்கறிஞர் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான வீடியோ விவகாரத்தில் அலட்சியமாக இருந்ததாக குறிப்பிட்டதை நீக்க வேண்டும் என்றும் சசிகலாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

7 நாட்கள் அவகாசம்
குறுக்கு விசாரணையை தொடங்குவதற்கு 7 நாட்கள் அவகாசம் வேண்டும் என்றும் சசிகலா தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது. பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் பிரமாணப் பத்திதரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது குறிப்பபிடத்தக்கது.
-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications