சிறையில் "சுயசரிதை" எழுதும் சசிகலா... அங்கேயும் தொடரும் 'தியானம்'!
பெங்களூரு சிறையில் சசிகலா சுயசரிதை எழுதி வருகிறாராம். சிறைக்குள்ளேயும் கூட தமது பாணி 'தியானத்தை' தொடருகிறாராம் சசிகலா.
சென்னை: பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சுயசரிதை எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளாராம். அத்துடன் சிறைக்கு உள்ளேயும் தியானத்தை தொடர்ந்து மேற்கொள்கிறாராம் சசிகலா.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா அரசியலில் குதித்தார். ஜெயலலிதாவைப் போல நடை உடை சிகை அலங்காரம் செய்து கொண்டார். ஆனால் இதை தமிழக மக்கள் எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை.
இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத சசிகலா அதிமுக பொதுச்செயலராகி முதல்வர் நாற்காலியில் அமரவும் முயற்சித்தார். ஆனால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் உச்சநீதிமன்றம் சிறை தண்டனையை உறுதி செய்ததால் முதல்வர் பதவி கனவு தவிடுபொடியானது.

ஜெ. கல்லறை சபதம்
சென்னையில் இருந்து பெங்களூரு சிறைக்கு சசிகலா போன நாளில் அவர் அரங்கேற்றிய நாடகங்கள் ஏராளம்.. ஜெயலலிதா நினைவிடத்துக்குப் போய் மூன்று முறை ஓங்கி அடித்து கர்ண கொடூரமாக சபதமெல்லாம் எடுத்தார்.

எம்ஜிஆர் இல்லத்தில் தியானம்
அப்படியே திடீரென எம்ஜிஆர் வாழ்ந்த ராமாவரம் இல்லத்துக்குப் போய் தியானத்தில் ஈடுபட்டார். பெங்களூரு சிறைவாசலில் கணவர் நடராஜனை கட்டிப்பிடித்து கதறி அழுதார்.

அங்கேயும் தியானம்
சிறைக்குள் போன சசிகலா தினமும் அதிகாலையிலேயே எழுந்துவிடுகிறாராம். அப்படியே ஒரு வாக்கிங் போய் அங்கேயும் தியானத்தை தொடர்கிறாராம்.

சுயசரிதை
அதன் பின்னர் ஜெயில் மேட் இளவரசியுடன் அமர்ந்து பழைய சம்பவங்கள், நிகழ்வுகளை பேப்பரில் எழுதுகிறாராம். இவை எல்லாவற்றையும் தொகுத்து சுயசரிதை ஒன்றை வெளியிடும் முடிவில் இருக்கிறாராம் சசிகலா.

அடுத்து லேப்டாப்
நாட்டை உலுக்கிய ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பீட்டர் முகர்ஜி சிறையில் தம்முடைய சுயசரிதை எழுத லேப்டாப் வேண்டும் என கேட்டிருந்தார். அதேபோல் தாமும் கேட்கலாமா என்கிற யோசனையில் இருக்கிறாராம் சசிகலா.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications