பிளஸ் 1 வகுப்பில் பிளஸ் 2 பாடம் நடத்தினால் - வார்னிங் தரும் பள்ளிக் கல்வித் துறை
சென்னை: தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புளை புறக்கணித்துவிட்டு பிளஸ் 2 பாடம் நடத்துவதைத் தடுக்க அதிரடியாக ஆய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
அதேநேரத்தில் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் கண்டிப்பாக பிளஸ் 2 பாடம் நடத்தக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் மதிப்பெண் பெறவும், 100 சதவீதம் தேர்ச்சி காட்டவும், அதிக மாணவர்களை முக்கிய பாடங்களில் சென்டம் எடுக்க வைக்கவும் தனியார் பள்ளிகளின் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகின்றன.
எவ்வளவு மாணவர்கள் மாநில அளவில் தரவரிசையில் இடம் பெறுகின்றனர், எவ்வளவு மாணவர்கள் நூற்றுக்கு நூறு வாங்குகின்றனர் என்பதற்கேற்ப இந்த பள்ளிகள் வணிக நோக்கில் மாணவர்களிடம் பல லட்சம் ரூபாயை நன்கொடையாகவும், கட்டணமாகவும் ஒவ்வொரு ஆண்டும் வசூலிக்கின்றன.
இந்நிலையில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் வகையில் சில அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் தனியார் பள்ளிகளை போல பிளஸ் 1 வகுப்பில், பிளஸ் 2 பாடம் நடத்த கல்வித் துறையிடம் அனுமதி கேட்டனர்.
இதற்கு கல்வித் துறை அதிகாரிகள் அனுமதி மறுத்ததுடன், "அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும் பிளஸ் 1 வகுப்பில், பிளஸ் 2 பாடங்களை நடத்தக் கூடாது" என எச்சரித்து உள்ளனர். அத்துடன் எந்தெந்த தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில், பிளஸ் 2 பாடம் நடத்துகின்றனர் என்பதை ஆதாரத்துடன் கண்டறியவும் உத்தரவிடப்பட்டுள்ளது பள்ளிக் கல்வித்துறை.
மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மெட்ரிக் ஆய்வாளர்கள் மூலம் தனியார் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புகளில் திடீர் ஆய்வு நடத்தவும், மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களை வாங்கிப் பார்த்தும், மாணவர்களிடம், பிளஸ் 1 பாடங்கள் குறித்த கேள்விகள் கேட்டும் சோதனை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட சில மாவட்டங்களிலுள்ள பல பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications