தனியார் பெரும் முதலாளிகள் மண் வளத்தை சுரண்ட அனுமதிப்பதை ஏற்க முடியாது: சீமான் காட்டம்

காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கும் முயற்சியை மத்திய அரசை கைவிடக் கோரியும், காவிரி ஆற்றில் மணல் அள்ளும் தமிழக அரசை கண்டித்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் கரூர் மாவட்டம் குளித்தலையில் சுங்கவாயில் அருகேயுள்ள நம்மாழ்வார் திடலில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
காவிரி ஆற்றில் அதிகப்படியான மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயம் அழிந்து வருகின்றது. மேலும், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
ஆற்றில் அரை அங்குலம் எடுக்கப்பட்ட மணல் மீண்டும் உருவாக 100 ஆண்டுகள் ஆகும் என ஆய்வில் கூறப்படுகின்றது. ஆனால் இது பற்றி தமிழக அரசு கவலை கொள்ளவில்லை. மாறாக, தற்போது பல அடி ஆழத்தில் மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலை நீடித்தால், வருங்காலத்தில் தண்ணீரின்றி மனிதனை மனிதனே கொன்று ரத்தத்தை குடிக்கும் நிலை உருவாகும். காரணம், தண்ணீர் தற்போது, வர்த்தகப் பொருளாக மாற்றப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.
மனிதன் உடலுக்கு தோல் போல் தண்ணீரை தேக்கி வைக்க மணல் முக்கியம். அதிகப்படியாக மணல் அள்ளப்பட்டால், நீர்வளம் முற்றிலும் குறைந்துவிடும்.
தனியார் பெரும் முதலாளிகள் மண்ணின் வளத்தை சுரண்ட அனுமதிப்பதை ஏற்க முடியாது. மண்வளம் மக்களுக்கானதே தவிர தனி முதலாளிகளுக்கு அல்ல. இப்போராட்டம் தமிழகம் முழுவதும் தொடரும் என்றார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications