கட்சியை அழிக்கிறார் தினகரன்.. சசிகலாவிடம் போட்டுக்கொடுத்த நிர்வாகிகள்!
தினகரன் தான் கட்சியை அழிப்பதாக முக்கிய நிர்வாகிகள் சிலர் சசிகலாவிடம் போட்டுக்கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: தினகரன் தான் கட்சியை அழிப்பதாக முக்கிய நிர்வாகிகள் சிலர் சசிகலாவிடம் போட்டுக்கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்லீரல் மற்றும் கிட்னி செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நடராஜன் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து கணவர் நடராஜனை காண சசிகலா 5 நாள் பரோலில் பெங்களூரு சிறையில் இருந்து சென்னைக்கு வந்தார். அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று கணவரை சந்தித்து நலம் விசாரித்தார் சசிகலா.

அரசியல் காய்களை நகர்த்தி..
அவருடைய பரோல் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் வீட்டில் இருந்தபடியே சசிகலா அரசியல் காய்களை நகர்த்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினகரனை போட்டுக்கொடுத்த நிர்வாகிகள்
சசிகலாவிடம் பேசிய நிர்வாகிகள் சிலர் தினகரன் மீது சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளனர். ஆதரவாக இருப்பவர்களையும் டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளனர்.

குளறுபடிகளுக்கு காரணம்
மூத்த நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்காமல் தினகரன் சர்வாதிகாரியைப் போல் நடந்துகொள்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மீடியாக்களிடம் தினகரன் பேசியதே கட்சியில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு காரணம் என்றும் கூறியுள்ளனர்.

குற்றச்சாட்டுகளால் அதிர்ச்சி
ஆதரவாளர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் தான் அவருக்கு எதிராக திரும்ப வேண்டிய சூழலை ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளனர். அனைத்து நிர்வாகிகளும் தினகரன் மீது அதிருப்தியை கொட்டவே அதிர்ச்சியடைந்த சசிகலா தினகரனுக்கு சில ஆலோசனைகளை கூறி எச்சரித்தாக தெரிகிறது.

அஞ்சும் சசிகலா
கட்சியை அழிப்பதே தினகரன்தான் என்றும் நிர்வாகிகள் சசிகலாவிடம் தெரிவித்துள்ளனர். கட்சியா தினகரனா என சூழல் ஏற்பட்டால் தனக்கு கட்சிதான் முக்கியம் என்றும் சசிகலா கூறியுள்ளார். கட்சி கையை விட்டு சென்றுவிடுமோ என்று சசிகலா அஞ்சுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சி
எப்பாடுபட்டாவது, கட்சியை குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள சசிகலா, குடும்பத்தைச் சேர்ந்த சிலருக்கு முக்கிய ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. இன்றுடன் பரோல் நிறைவடைய உள்ள நிலையில் இன்று பிற்பகல் அவர் பெங்களூரு புறப்படுவார் என கூறப்படுகிறது.
-
தைலாபுரத்தில் சசிகலாவுக்கு கமகம விருந்து.. கூட்டணி உறுதியானதால் ராமதாஸ் ஏற்பாடு -
Election Exclusive: விஜய் + சசிகலா + ராமதாஸ்? தமிழக அரசியலில் பரபரப்பைக் கிளப்பும் 3வது கூட்டணி? கணக்கு சரியா வருமா? -
Election Exclusive: சபாஷ் சரியான போட்டி! 2026ல் 5 முனைப் போட்டி! ’தென்னந்தோப்பில்’ சின்னம்மா.. அய்யா கையில் ’தேங்காய்’ -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம்












Click it and Unblock the Notifications