இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் குடமுழுக்கு - பக்தர்கள் குவிந்து வருவதால் பாதுகாப்பு தீவிரம்
திருச்சி: ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத சுவாமி திருத்தலத்தின் இரண்டாம் கட்ட கும்பாபிஷேகம் இன்று 18ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். எனவே, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக உள்ளது.
108 திவ்ய தேசங்களில் மிக முக்கியமான தலமாகத் திகழ்கிறது ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாத பெருமாள் திருக்கோயில்.

சயனிக்கும் ரங்க நாதர்:
காவிரி, கொள்ளிடத்துக்கு நடுவே தண்ணீர் சூழ்ந்த பகுதியில் சயனித்தபடி, அகிலம் முழுவதையும் அருள்பாலித்துக் காக்கும் ஸ்ரீரங்கநாதரைத் தரிசிக்க, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வார்கள்.

முதல்கட்ட கும்பாபிஷேகம்:
ஊரில் பாதி அளவுக்கு பிரமாண்டமாகத் திகழும் ஸ்ரீரங்கம் கோயிலின் கும்பாபிஷேகம் இரண்டு கட்டமாகப் பிரிக்கப்பட்டு ஏற்கெனவே முதல்கட்டமாக சிறப்புற நடந்தது.

இரண்டாம் கட்ட ஏற்பாடுகள்:
இந்த நிலையில் இரண்டாம் கட்ட மகா சம்ப்ரோஷணம் எனப்படும் கும்பாபிஷேகத்தையொட்டி, திருப்பணிகள் மளமளவென நடந்தன.கடந்த மாதத்தில் கும்பாபிஷேகம் வைப்பதாக இருந்தது.

நாளை குடமுழுக்கு:
பிறகு நவம்பர் 9 ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் தீபாவளிக்கு முந்தைய நாள் என்பதால் அதுவும் கைவிடப்பட்டது. அதையடுத்து இன்றைய தினம் ஸ்ரீரங்கம் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

யாக பூஜைகள் மும்முரம்:
இதையொட்டி கடந்த 4 நாட்களாக யாக சாலை பூஜைகள் சிறப்புற நடைபெற்று வருகின்றன. நேற்று காலை ஆறாம் கால யாகபூஜை நடைபெற்றது. மாலையில் ஏழாம் காலை யாக பூஜை நடைபெற்றது.

ஏற்பாடுகள் தீவிரம்:
இன்று புதன்கிழமை காலை 8.45 மணி முதல் 10 மணிக்குள் மகா சம்ப்ரோஷணம் நடைபெறுகிறது. இதில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொள்வார்கள். எனவே, அந்த பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
-
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்!












Click it and Unblock the Notifications