குட்கா.. போதைப் பொருள்.. உயிரை பறிக்கும் துறைதான் சுகாதாரத் துறை… ஸ்டாலின் அதிரடி
குட்கா, போதைப் பொருள் லஞ்ச விவகாரத்தின் மீது அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். உயிரை பறிக்கும் துறையாக சுகாதாரத் துறை இருக்கிறது என்றும் அவர
சென்னை: குட்கா, போதைப் பொருள் லஞ்ச விவகாரத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்று தனது சொந்த தொகுதியான சென்னை கொளத்தூருக்குச் சென்ற ஸ்டாலின் மாணவர்களுக்கான நலத் திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கொலை குற்றத்திற்கு ஒப்பானது போதைப் பொருளை விற்க லஞ்சம் வாங்கியது. போதைப் பொருள் உண்பதால் உயிரே போகும் நிலை ஏற்படும்.

உயிரை பறிக்கும் துறை
மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது உயிரை காக்கும் துறை. ஆனால் அந்தத் துறை தற்போது உயிரை பறிக்கும் துறையாக விஜயபாஸ்கர் தலைமையில் மாறியிருக்கிறது.

ஏன் வழக்கு போடவில்லை?
தான் செய்தது தவறு இல்லை என்றால் ஏன் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நீதிமன்றத்தை நாடவில்லை. அல்லது வதந்தியை பரப்புகிறார்கள் என்று கூறி ஏன் வழக்குப் போடவில்லை?

சட்டப்படி உறுதி
குட்கா லஞ்ச விவகாரத்தை சட்டபடியாக விஜயபாஸ்கர் சந்திக்க வேண்டும். சட்டத்தின் மூலம் அவர் தவறு செய்யவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
பல்வேறு துறைகளில் புகார்கள் கூறினாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், காவல்துறை உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குதிரை பேர ஆட்சி
தமிழகத்தில் குதிரை பேர ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால் அவர்கள் மக்கள் பிரச்சனைக்கு முகம் கொடுப்பதில்லை. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவே படாதபாடுபடுகின்றனர் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா?












Click it and Unblock the Notifications