அரசியலில் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார் ஸ்டாலின்.. எச் ராஜா தாக்கு
எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியலில் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார் என எச் ராஜா தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அரசியலில் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கிறார் என எச் ராஜா தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் பாஜக தேசிய செயலர் எச். ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது காவிரி வாரியம் அமைக்காமல் மத்திய அரசு பொறுப்பை தட்டி கழிக்கவில்லை என அவர் கூறினார்.

4 மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தினால், மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளது என்றும் எச் ராஜா தெரிவித்தார். அரசியலில் என்ன செய்வது என தெரியாமல் ஸ்டாலின் உள்ளார் என்றும் எச் ராஜா கூறினார்.
மக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்திய சீமான், வைகோ, பாரதிராஜா,கவுதமன் உள்ளிட்டோரை குண்டாஸில் கைது செய்ய வேண்டும் எச் ராஜா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications