ஸ்கூட்டர்... சைக்கிள்... இப்போ டிராக்டர்... திடீர் விவசாயி அவதாரம் எடுத்த ஸ்டாலின்
சிவகங்கை: மக்களை சந்திக்க ஸ்கூட்டர், சைக்கிளில் பயணம் செய்த மு.க.ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் கரும்புக்காட்டில் டிராக்டர் ஓட்டி விவசாயிகளை அசத்தினார்.
நமக்கு நாமே விடியல் மீட்பு பயணம் மேற்கொண்டுள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் போகுமிடம் எங்கும் பெண்கள், மாணவர்கள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலதிபர்களை சந்தித்து பேசி வருகிறார்.
10ம் நாளான நேற்று சிவகங்கை மாவட்ட மக்களை சந்தித்து ஸ்டாலின் குறை கேட்டார். காரைக்குடி சென்ற ஸ்டாலின் வழிநெடுகிலும் கிராமங்களில் பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டார்.

காரைக்குடியில் ஸ்டாலின்
காரைக்குடியில் வணிகர்களை சந்தித்து உரையாடிய ஸ்டாலின் வணிகவரி கட்டணங்கள் குறித்து கேட்டார். அதிமுக ஆட்சியில் வணிகவரி பலமடங்கு உயர்த்தப்பட்டு விட்டதாக வியாபாரிகள் புகார் தெரிவித்தனர்.பின்னர் அங்கிருந்து கொப்புடையம்மன் கோயில் பகுதியில் மக்களை சந்தித்து பேசினார். திமுகவுக்கு ஆதரவு அளியுங்கள். அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட அவலங்கள் அகற்றப்படும், என ஸ்டாலின் உறுதி அளித்தார்.

கரும்பு தோட்டத்தில்
காரைக்குடியில் இருந்து கல்லல் சென்றார். அங்கு மக்களை சந்தித்து விட்டு சொக்கநாதபுரம் சென்று கரும்பு விவசாயிகளை சந்தித்து பேசினார். அவர்கள் ஸ்டாலினிடம், கரும்புக்கு நிர்ணயம் செய்துள்ள விலை கட்டுபடியாகவில்லை என்றும் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் புகார் கூறினர். திமுக ஆட்சியில் கரும்பு விவசாயிகளின் இன்னல்கள் துடைக்கப்படும், என ஸ்டாலின் உறுதி அளித்தார்.

டிராக்டர் ஓட்டிய ஸ்டாலின்
கரும்புக்காட்டில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை எடுத்து ஓட்டினார் ஸ்டாலின், அப்போது அங்கிருந்த விவசாயிகள் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து ஸ்டாலினிடம் பேசிய விவசாயிகள், வைகை ஆற்று நீர் கடலில் கலக்காமல் இருக்க தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

திமுக ஆட்சி மலரும்
சொட்டுநீர் பாசனத்துக்கான மானியம் முழுமையாக கிடைப்பதில்லை எனவும், வேலையாள் பற்றாக்குறை, விலையின்மை போன்றவற்றால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக ஸ்டாலினிடம் தெரிவித்தனர். மேலும் பல ஆண்டுகளாக விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர். அப்போது ஸ்டாலின் திமுக ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலரும் அப்போது குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று கூறினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications