எம்.எஸ்.விக்கு அரசு மணிமண்டபம் கட்டவேண்டும்: ஸ்டாலின், தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை
சென்னை : இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு, திரையுலகிற்கு மட்டுமல்லாது அனைத்து தரப்பினருக்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பு என்று தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக அரசு, எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவாக, மணிமண்டபம் கட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதனின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பின், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஸ்டாலின் கூறியதாவது: எம்.எஸ்.வி.யின் மறைவு, ஈடுகட்டமுடியாத பேரிழப்பு. எம்.எஸ்.வி.யின் மறைவு செய்தி, கருணாநிதியை சோகத்திற்குள்ளாக்கியுள்ளது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு கட்சி சார்பில் ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு, எம்.எஸ்.விஸ்வநாதன் நினைவாக, மணிமண்டபம் கட்ட வேண்டும் மற்றும் மத்திய அரசு, எம்.எஸ்.வி.யை கவுரவிக்கும் பொருட்டு, தபால்தலை வெளியிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திரை இசைக்கு உயிர் ஊட்டி கொண்டிருந்தவர் உயிர் துறந்து படுத்து இருப்பதை பார்த்து பதைபதைக்கிறது நெஞ்சம் பாடிக்கொண்டிருந்த வாய் மூடிக்கிடப்பதும் தாளமிட்டு கொண்டிருந்த கைகள் துவண்டு கிடப்பதையும் பார்ப்பதற்கு நெஞ்சு உறுதி வேண்டும்.

அவரது இழப்பை தாங்கிக் கொள்ளும் உறுதியை, தமிழக மக்களுக்கும் திரை உலகத்தினருக்கும் அவர் குடும்பதாருக்கும் இறைவன் அருள வேண்டும். இசைத்துறையில் பல நட்சத்திரங்களை உருவாக்கிய அந்த மாமேதைக்கு அந்த துறையில் பல இளைய தலைமுறையினர்களை ஊக்கபடுத்துவதும் உருவாக்குவதுமே இச்சமுதாயம் செலுத்தும் அஞ்சலியாக இருக்க முடியும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
விஜய் டிவியில் திடீரென முடிவுக்கு வரும் சீரியல்.. அதுவும் இதுதான் காரணமா? பீல் பண்ணும் ரசிகர்கள் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications