கருத்தடை ஆபரேசன் செய்து இறப்போர் எண்ணிக்கையில் தமிழகத்துக்கு முதலிடம்
சென்னை: கருத்தடை ஆபரேஷன் செய்துகொள்ளும் பெண்கள் இறந்துபோகும் சம்பவங்கள் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில்தான் நடப்பதாக மத்திய சுகாதாரத்துறை புள்ளிவிவரம் அம்பலப்படுத்தியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் கருத்தடை ஆபரேசன் செய்த பெண்கள் பலர் மரணமடைந்த சம்பவம் சமீபத்தில் நடந்தது. ஆனால் நாட்டிலேயே இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் நடைபெறும் மாநிலம் தமிழகம்தான் என்பது அதிர்ச்சியான சோகமே.
சுகாதாரத்துறையில் மேம்பட்டு உள்ளதாக மார்தட்டும் தமிழகம், கருத்தடை செய்யும் பெண்களின் உயிரை காப்பாற்ற தவறி வருகிறது என்பது நிதர்சனம். மத்திய அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் 2008-2012 வரையில் 130க்கும் மேற்பட்ட பெண்கள் கருத்தடை செய்து கொண்டதால் மரணமடைந்துள்ளதாக அந்த புள்ளி விவரம் கூறுகிறது.

தமிழகத்தில் நகர்ப்புறங்கள் பெருகிவிட்ட நிலையிலும், கருத்தடை ஆபரேசன்களால் பெண்கள் அதிகம் இறந்துபோக இரு காரணங்கள் கூறப்படுகிறது. கருத்தடை ஆபரேசனில் இறந்தவர்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கணக்கெடுக்கும் முறை வித்தியாசமானது. அதாவது, கருத்தடை ஆபரேசனால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மாநில அரசு நிவாரண தொகை வழங்கினால்தான் அதை கருத்தடை ஆபரேசனால் நிகழ்ந்த மரணம் என்று மத்திய சுகாதாரத்துறை கணக்கெடுக்கிறது.
அப்படிப்பார்த்தால், பிற மாநிலங்களைவிட தமிழகம் அதி விரைவாக நிவாரண தொகையை பாதிக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு அளித்துவிடுகிறது. பல மாநிலங்கள் அப்படி செய்வதில்லை, அல்லது பல ஆண்டுகள் கழித்து அந்த தொகையை அளிக்கின்றன. இதுவும் தமிழகத்தில் கருத்தடை சாவுகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது போன்ற தோற்றம் ஏற்பட காரணமாக இருக்க கூடும்.
மற்றொரு காரணம், தமிழகத்தில் கருத்தடை செய்துகொள்வது பெரும்பாலும் பெண்கள்தான். அதாவது, கருத்தடை ஆபரேசன் செய்வோரில் 99.4 சதவீதம் பெண்கள்தான். ஆண்களுக்கான கருத்தடை முறையைவிட பெண்களுக்கானது கொஞ்சம் சிக்கல் நிறைந்தது என்பதால், இதுபோன்ற சம்பவங்கள் அதிகம் பதிவாகலாம் என்றும் கூறப்படுகிறது.
2010-11ல் 41 பேரும், அதற்கடுத்த ஆண்டில் 29 பேரும், 2012-13ல் 5 பேரும் கருத்தடை ஆபரேசனின்போது தமிழகத்தில் இறந்துள்ளனர். அதேபோல 2010-11ல் 318 பேருக்கும், அதற்கடுத்த ஆண்டில் 297 பேருக்கும் கருத்தடை ஆபரேசன் பலனளிக்காமல் போயுள்ளது. கடந்த மூன்றாண்டுகளில் கருத்தடை ஆபரேசன் பாதிப்பாளர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு அளித்துள்ள நிவாரண தொகை ரூ.3.2 கோடிகளாகும்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications